கோவை, அக்.12- கோவை புறநகர் சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு இல்லை என்ற சுங்க சாவடி நிர்வாகத்தின் அறிவிப் பால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், கணியூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடி வழியாக கேரளம், கோவை மாநகருக்குள் நாள் ஒன்றுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக னங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களுக்கு செல்லும் முக்கிய சாலை யாக இந்த சுங்கச்சாவடி அமைந் திருக்கிறது. கனியூர் சுற்றியுள்ள கிராமங் களில் பெரும்பகுதி விவசாய பகுதி களாக இருப்பதால், விளைவித்த பொருட்களை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு செல்ல இவ் வழியே பயன்படுத்தி வருகின் றனர். உள்ளூர் விவசாயிகள் மற்றும் உள்ளூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களுக்கு வாகனங்கள் இந்த சுங்கச்சாவடி வழியாக செல்வதற்கு கட்டணம் வசூலிக் கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படது என அறிவிக்கப்பட்டு அது நடை முறையில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதிக்குப்பின் உள்ளூர் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணங் கள் வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை சென்றால் கூட கட்டணமாக ரூ.200 மேல் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இது குறித்து சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால், பொதுமக்கள் அதிர்ப்த்தியடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த சில தினங் களாக கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருகே இருக்கும் கிராமங்களுக்கு செல் வதற்கு கூட கட்டணம் செலுத்தும் சூழல் உருவாகி உள்ளது. இத னால் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் எரிபொருள் செலவு ஏற்படுவதுடன், கால விரை யமும் ஏற்படுகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றோம். இந்நிலையில், கனியூர், கருமத் தம்பட்டி சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் சுங்கச்சாவடி உரிமை மீட்புக்குழு என ஒரு புது அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் தொடர் போராட்டம் நடத்தி ஏற்கனவே அனு பவித்து வந்த உரிமைகளை மீண்டும் போராடி பெருவது என்கிற முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். மேலும், சுங்கச்சாவடி உரிமை மீட்புக்குழு என்கிற பெயரில் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கியுள்ளனர். இந்த குழு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் இணைந் துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.