திருப்பூர், ஜூன் 28 - திருப்பூர் மாநகராட்சி காயிதே மில்லத் நகரில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக மாநில நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டு காயிதே மில்லத் நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப் பதற்கு மாநகராட்சி தீர்மானித்து, சுத்தி கரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட போது, அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காயிதே மில்லத் நகர் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலைய எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் அடுத்த கட்ட தொடர் போராட் டங்களை நடத்தவும் முடிவு செய்திருந்த னர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரண்டு முறை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சுத்தரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந் தனர்.
இந்த நிலையில் அப்பகுதி பொது மக்களுடன் புதனன்று நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார். இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்தும் பேசினர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் இத்திட்டத்தினால் தாங் கள் அச்ச நிலையில் இருப்பதால் இத் திட்டம் மாற்று இடத்தில் நிறைவேற்ற வேண்டும். இதே இடத்தில் நிறை வேற்றக் கூடாது என ஒருமித்த குரலாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறிய நிலையிலும் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு வதால் இத்திட்டம் மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த இடத் தில் போடப்பட்ட மதிப்பை விட கூடு தல் மதிப்பீட்டில் மாற்று இடத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித் தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப் பினர் க.செல்வராஜ் , நாடாளுமன்ற உறுப்பினர் கே .சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.