திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் பின்னலாடை தொழி லில் நிலவும் நெருக்கடி குறித்து இங்குள்ள ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி, போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று திருப் பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூரில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே. சுப்பராயன் கூறுகையில், திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த சில வருடங்களாக சிறுகச் சிறுக குறைந்து, குறுகி வருகிறது. இங்கு பனியன் தொழில் தொடங்கிய காலத் தில் இருந்து இப்போது இருப்பது போல், முன்பு எப்போதுமே தேக்க நிலை, நெருக்கடி நிலவியது இல்லை. திருப்பூர் பனியன் ஏற்றும தியாளர்கள் சிலர், மிகுந்த நம் பிக்கையோடு, மோடி அதிகாரத் திற்கு வந்தால் பின்னலாடை தொழில் வளர்ச்சி அடையும், விரிவடையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது கானல் நீராக ஆகிவிட்டது. ஒன்றிய ஆட்சியாளர்கள் வெறும் தோற்றம் காட்டுகிறார்கள். வளர்ச் சிக்கு இம்மியளவு கூட உதவ வில்லை. இது நிதர்சன உண்மையா கும். ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் மிகப் பெரும் முதலாளிகள் சலுகைகளை பெறுகிறார்கள். பெரும் முதலாளிக ளுக்கு கடன்களை ரத்து செய்யும் மோடி அரசு, ஒரே ஒரு பனியன் கம் பெனிக்கு கூட கடன் ரத்து செய்தது கிடையாது. பல கம்பெனிகள் கடன் வலையில் சிக்கி வதங்கி போய் விட் டார்கள். மோடி அரசு வந்தால் நல் லது நடக்கும் என்று நம்பியவர்கள், இன்று வருந்துகிறார்கள். பிள்ளை யார் பிடிக்கப் போய் குரங்காக மாறி விட்டது என்பதாக சொல்கிறார்கள். பின்னலாடை தொழிலில் ஒரு சில ரைத் தவிர மற்றவர்கள் சிறு குறு நடுத்தர உற்பத்தியாளர்களாகத் தான் இருக்கிறார்கள்.
ஆனால், ஒன்றிய அரசு இந்த சிறு குறு நடுத்தர தொழில் துறையி னரை அழித்து, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு துணை செய்கிறார்கள். அதன் தீய விளைவின் காரணமாகத்தான் இன்று திருப்பூர் தொழில் துறையினர் நெருக் கடியை சந்தித்து வருகிறார்கள். ஒன்றிய அரசின் சிறு குறு நடுத்தர தொழிலுக்கு எதிரான குற்ற நடவ டிக்கைகளால் ஏற்பட்ட விளைவு இது என்று நான் பகிரங்கமாக குற் றம் சாட்டுகிறேன். பஞ்சு, நூல் விலையை கட்டுப் படுத்துவதற்கான அதிகாரம் ஒன் றிய அரசின் கையில் உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை ஒன்றிய அரசு பயன்படுத்த மறுக்கிறது. சிறு குறு நடுத்தர தொழில்களை காப் பாற்றுவதற்கான கொள்கை ஒன் றிய மோடி அரசிடம் இல்லை.
மின் கட்டண பிரச்சனை
அதேபோல் மின் கட்டண உயர் வும் இந்த தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசு கள் மிகுந்த கவனத்தோடு சிந்தித்து தொழில்துறையினருக்கு சலுகை அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஜவுளி தொழில் துறையினருக்கு தேவையான பருத்தியை விவசாயி கள் விளைவிப்பதற்கு உரிய சலு கைகள் வழங்கி ஊக்குவிக்க வேண் டும். பனியன் உற்பத்தியாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைக ளுக்கு குருட்டு அடி அடிக்காதீர் கள், குறி பார்த்து அடியுங்கள், என்று கேட்டுக் கொள்கிறேன். ஒன் றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக போரா டுவதற்கு அவர்கள் முன் வர வேண்டும். திருப்பூர் தொழிற்சங்கங் களும் அதற்கு ஒத்துழைக்க தயா ராக இருக்கின்றனர். வேலைக்கு ஆட்கள் தேவை என்று தகவல் சுவரொட்டிகள் ஒட் டப்பட்ட திருப்பூரில் இப்போது கட் டடங்கள் காலி, வாடகைக்கு, என்ற விளம்பரங்கள் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. நெருக்கடி முற்றியுள் ளது. தொழிலாளர்கள் கையில் காசு இல்லை, அவர்களுக்கு வேலை இல்லை. மெர்ச்சண்ட் எக்ஸ் போர்ட்ஸ் பிரிவினர் அனேகமாக 90 சதவீதம் பேர் தங்கள் தொழிலை இழந்து விட்டனர். ஒன்றிய அர சின் சிறு குறு நடுத்தர தொழில்க ளுக்கு எதிரான கொள்கைகளை மாநில அரசு எதிர்க்க வேண்டும். திருப்பூரில் உள்ள ஏற்றுமதியா ளர்கள், உற்பத்தியாளர்களை தமி ழக முதல்வர் நேரில் அழைத்துப் பேசி இங்கிருக்கும் பிரச்சனை களை கேட்டு அறிந்து, இதை எப்படி தீர்க்கலாம் என்று ஆலோசனை களை பெற்று, போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லாவிட்டால் இப்போது இருக்கும் திருப்பூர் பழையபடி சிறு கிராமமாக மாறிப் போய்விடும், என் றார். இந்தப் பேட்டியின் போது இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் மற்றும் திருப் பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.