கோயம்புத்தூர், ஆக. 6- கோவை மாநகராட்சி மேயராக 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.
19 ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப் பினராக கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், உடல்நிலை காரணமாக திடீரென தனது மேயர் பதவியை கடந்த ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கோவை மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் செவ் வாயன்று நடைபெற்றது. இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், போட்டி யின்றி ஒருமனதாக கே.ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். வெற்றிச் சான்றிதழ் பெற்ற கே.ரங்கநாயகியை அமைச்சர்கள் கே.என். நேரு, சு.முத்துசாமி ஆகியோர் மேய ருக்கான இருக்கையில் அமரவைத்தனர்.