இந்தியா கூட்டணியின் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமிக்கு ஆதரவு தெரிவித்து, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது, மாவட்டச் செயலாளர் சிவசங்கர், மாவட்டத் தலைவர் யாழ் நடராசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டார்கள்.