districts

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய நீதி கேட்டு மார்ச் 1ல் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், பிப்.27- பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழி லாளர்கள் விவகாரத்தில் உரிய  நடவடிக்கை எடுக்காத அதிகாரி களின் செயலைக் கண்டித்தும், மார்ச்  1 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என விசைத்தறி தொழிலாளர் சங் கம் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் அடுத்துள்ள வால்ராசம்பா ளையம், ஏரோ டெக்ஸ் விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்த, சுமார் எட்டு  குடும்பங்களை சேர்ந்த 27க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.  இவர்களுக்கு முறையாக கூலி வழங்குவதில்லை. ஒப்பந்தம் முறை யாக அமல்படுத்துவதில்லை. இத னால், எங்களால் தொடர்ந்து அங்கு  பணிபுரிய முடியவில்லை. இதுகு றித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வாங்கிய முன்  பணத்தினை கட்ட வாய்தா வாங்கி கொடுப்பதுடன், எங்களிடம் விசைத் தறி நிர்வாகம் பெற்றுள்ள செக்  சிலீப், வெற்று பேப்பர் கையெ ழுத்து, பாண்டு பேப்பர் மற்றும் எங்கள் முன்பணத்திற்கு உறவின ரின் ஜாமீன் பத்திரம், நாங்கள் பணி புரிந்த விசைத்தறி கூடத்திற்கு அருகே உள்ள வீட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, எங்கள் உடைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் உடை, பாட  புத்தகங்கள் ஆகியவையும் அங் கேயே உள்ளது. வேலையை விட்டு  வெளியேறிய பிறகு, எங்களது உடைமைகளை விசைத்தறி உரிமை யாளர்கள் தர மறுக்கின்றனர். எனவே, மேற்கண்ட அனைத்திற்கும் தீர்வுகாண கோட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனு  வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட திருச்செங்கோடு வருவாய் கோட் டாட்சியர், பிரச்சனைக்கு உரிய தீர்வு  எட்டும் வரை உறவினர் வீட்டில் தங்கு மாறும், உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படும் என அந்த தொழிலா ளர்களை அனுப்பி வைத்தார். ஆனால், 15 நாட்களுக்கு மேலாகி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. பிரச்சனைக்கு உரிய  தீர்வு எட்டப்படாத நிலை தொடர்வ தால், அரசுப் பள்ளியில் படித்து வரும்  நிதினியா, மீரா, ஏசுராஜ் ஆகிய  மூன்று குழந்தைகளின் கல்வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்க ளின் பாடப்புத்தகம் மற்றும் பள்ளி  சீருடை உள்ளிட்டவை விசைத் தறி நிர்வாகம் உள்ள குடியிருப்பு வீட்டில் உள்ளதால், அவர்கள் மேற் கொண்டு கல்வி கற்க முடியாத நிலை உள்ளது.  இதுகுறித்து நாமக்கல் மாவட்ட  விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.அசோ கன் கூறுகையில், அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கி னால் விசைத்தறி தொழிலாளர்கள், அவதிக்குள்ளாகி வருவதுடன், விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி கற்க முடி யாமல் இடைநிற்றல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  பாதிக்கப்பட்ட விசைத்தறி தொழிலா ளர் விவகாரத்தில் உரிய நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும், உடனடி யாக தலையிட்டு இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி, வருகிற மார்ச் 1 ஆம் தேதி  காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் சார்பாக,  பள்ளிபாளையம் வருவாய் ஆய் வாளர் அலுவலகம் முன்பு பாதிக்கப் பட்ட தொழிலாளர்களை திரட்டி காத் திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.