districts

நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 20 வழக்குகளில் தீர்ப்பு

நாமக்கல், மே 17- நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஒரே நாளில் ஐந்தாண்டுகளுக்கு மேல்  நிலுவையில் இருந்த 15 வழக்குகள் உட்பட 20 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், வர்த் தக அமைப்புகள் இழப்பீடாக நுகர் வோர்களுக்கு ரூ.21 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தி வருமாறு, சேந் தமங்கலத்திலுள்ள சேர்ந்த மளிகை  கடை மீதான வழக்கில் ஆதாரம் இல் லாமல் கவறான நோக்கத்துடன்  புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ள தால் வழக்கை தாக்கல் செய்தவர் வழக்கு செலவு தொகையாக ரூ.10  ஆயிரம் கடைக்காரருக்கு வழங்க வும், நாமக்கல்லிலுள்ள பேக்கரி மீதான வழக்கில், முகாந்திரம் இல்லாமல்  புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை தாக்கல் செய்தவர் வழக்கு செலவு தொகையாக ரூ 5 ஆயிரம்  கடைக்காரருக்கு வழங்கவும் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதேபோன்று, நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோட்டில் வசித்து வரும் இசை அமுதன் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு கிளை ஐசிஐசி வங்கியில் நகைகளை  அடமானம் வைத்து ரூ 3,25,542/- கடன் வாங்கி இருந்தார். ஆனால், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நகைகளை வங்கி ஏலம் விட்டுவிட்டது என கடந்த 2013 ஆம் ஆண்டில் வழக்கு தாக்கல்  செய்திருந்தார். கடந்த மாதம் விசா ரணை முடிவுற்றிருந்த நிலையில் (27-04-2023) நாமக்கல் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணைய உறுப்பி னர் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலை யில், நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். புகார்தாரர் கடன் பெறும்போது வங்கியில் சமர்ப்பித்த கடன் விண்ணப்பத்தில் போதுமான குறைபாடு உடைய முகவரியை சமர்ப் பித்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட் டுள்ளது. தவணை தேதிக்குள் கடனை செலுத்தாததால் புகார்தாரர் கொடுத் திருந்த முகவரிக்கு கடனை செலுத்த தவறினால் நகை ஏலம் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அனுப்பிய கடி தம் போதுமான முகவரி இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.

பின்னர் செய்தித்தாள்களில் நகை ஏலம் விடுவது குறித்து வங்கியால் விளம்பரம் செய்யப்பட்டு சட்டத்தை பின்பற்றி ஏலம் நடைபெற்றுள்ளது. வங்கி நகைகளை ஏலம் விட்ட நடை முறையை சேவை குறைபாடு என்று கூற முடியாது என தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. மேலும், கடந்த 2013 அக்டோபரில் நகைகளை ரூ.4.07,890 -க்கு ஏலம் விட்டு வங்கிக்கு வரவேண் டிய தொகை ரூ 2,43,807/- ஐ புகார் தாரர் கடன் கணக்கில் வங்கி வரவு வைத்துக்கொண்டது. நகைகள் ஏலம் விடப்பட்ட சில நாட்களில் புகார்தாரர் முழு முகவரியை தெரிவித்து வழக் கறிஞர் அறிவிப்பு வங்கிக்கு கொடுத் துள்ளார். இருப்பினும் புகார்தார ருக்கு நகை விற்பனை செய்ததில் மீத முள்ள தொகை ரூ 1,64,083/-  வங்கி  திருப்பித் தராததும் தற்போது வரை அந்த பணத்தை வைத்துக் கொண்டி ருப்பதும் சேவை குறைபாடு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்கி நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்த இசை அமுதனுக்கு ரூ.1,64,083, மற் றும் இந்த தொகைக்கு அதற்கு 2013 ஆம் ஆண்டு முதல்   வட்டியும் வங்கி யின் செயலால் ஏற்பட்ட மன உளைச் சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு

நாமக்கல் மாவட்டத்தில் சிங்க ளாந்தபுரத்தில் உள்ள வசித்து வரும் முத்துசாமி மகன் பச்சமுத்து  கார்ப்ப ரேசன் வங்கியில் கணக்கு வைத்துள் ளார். அவர் அதே ஊரில் உள்ள ஏடி எம்மில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதத் தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஏடிஎம் அட்டையை பொருத்தி ரகசிய குறியீட்டை பதிவு செய்போது பணம் ரூபாய் பத்தாயிரம் வராமல் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக இயந்திரத் தில் சீட்டும் மொபைல் போனுக்கு செய்தியும் வந்துள்ளது. இதுகுறித்து வங்கியின் இணையதளத்திலும், வங் கிக்கு சென்று  நேரடியாகவும் புகார் கொடுத்தும், ஏடிஎம் இயந்திரம் பணம் வழங்கி விட்டது என்று வங்கி நிர்வாகம் புகாரை தள்ளுபடி செய்து விட்டது. அவர் பணம் எடுத்த நாளில் ஏடிஎம்மில் சிசிடிவி கேமரா பதிவு களை கேட்டும் வங்கி வழங்க வில்லை. இந்த வழக்கை விசாரித்த உறுப் பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலை யில் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் ஆகி யோர் வழங்கிய தீர்ப்பில், வாடிக்கை யாளர் புகார் செய்த பின்னர் அவர் ஏடிஎம்க்கு சென்ற நாளில் உள்ள  கேமரா பதிவுகளை உடனடியாக வங்கி நிர்வாகம் பெற்று பாதுகாத்து வைத் திருக்க வேண்டும்.  அதனை வழங்கி  ஏடிஎம் எந்திரம் பணம் வழங்கியது என்று நிரூபிக்க வேண்டும்.  இதனை செய்யாததால் ஏடிஎம் இயந்திரம் வாடிக்கையாளருக்கு பணம் வழங்க வில்லை என முடிவு செய்யப்பட்டு, பச்சமுத்துக்கு வங்கி நிர்வாகம் அவ ரது கணக்கில் கழிக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரம் மற்றும் இந்த தொகைக்கு  2016 ஆண்டு முதல் வட்டியும் அவ ருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம் நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண் டும் என்று உத்தரவிட்டுள்ளது. நான்கு  வாரத்துக்குள் வழங்க தவறினால் இழப்பீட்டுத் தொகையுடன் ஒவ் வொரு நாளும் ரூபாய் 100 இழப்பீடு கூடுதலாக சேர்த்து வழங்க வேண் டும் என்றும் அந்த உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரே நாளில் வெவ்வெறு வகையிலான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட் டுள்ளது.