திருப்பூர், ஜூலை 27 – ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்கள் சங்கத்தின் புகழ் வாய்ந்த தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான சுபாஷ் முண்டாவை மாஃபியா கிரிமினல் கும்பல் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. கொலையுண்ட மக்கள் தலைவருக்கு திருப்பூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வணக்கம் செலுத் தப்பட்டது. பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தில் முன் னின்று போராடிய மகத்தான போராளி, இளம் தலைவர் சுபாஷ் முண்டாவை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் வேலம்பாளையம் சாலைப் பிரிவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மலர் தூவி செவ்வணக் கம் செலுத்தினார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகி ருஷ்ணன், ஆர்.குமார், டி.ஜெயபால் உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகம் தியாகி பழனிசாமி நிலையத்தின் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பி ரமணி, கே.ரங்கராஜ் உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.