நாமக்கல், நவ.16- ஊர் கிணற்றை சுத்தம் செய்தபோது, ஜேசிபி தவறி விழுந்து நீரில் மூழ்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி எட்டா வது வார்டு, மாங்குட்டை பாளையம் பகுதியில் மாரியம் மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, கோயில் அருகே உள்ள ஊர் கிணறு சுத்தம் செய்யப்பட்டது. ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், எதிர் பாராத விதமாக ஜேசிபி கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில், ஜேசிபி வாகனத்தில் இருந்த கைலா சம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (35) என்பவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், சுமார் 2 மணி நேர போராடி மூழ்கிய ஜேசிபி மற்றும் உயிரிழந்த மூர்த்தியை மீட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர்கிணற்றை சுத்தம் செய்யும் போது, கிணற்றுக்குள் ஜேசிபி விழுந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.