தருமபுரி, அக். 2- தருமபுரி அடுத்த ராசிக்குட்டை என் கிற ஊரில் 3ஆயிரத்து 500 ஆண்டுக ளுக்கு முந்தைய ஜார் கண்டெடுக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியிலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள ராசி குட்டை என்ற சிற்றூர் உள்ளது. அதன் அருகிலுள்ள குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்போது பானை ஓடு ஒன்று தென்பட்டது. மாரண்ட அள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் வித்யாகரன் அதனை அகற்ற முயன்ற போது, அது ஒரு மூன்று கால்கள் உள்ள ஜாடி ஒன்றின் பகுதி என்பதை கண்டார். அதன் ஒரு பகுதி கொஞ்சம் உடைந்திருந்தது. அது மட்டுமின்றி மேலும் இரண்டு உடைந்த ஜாடிகளும் அங்கே கிடைத்துள்ளது. இந்த மட்பாண்டங்களை மாணவன் விதியாகரன் தன்னுடைய வரலாற்று ஆசிரியர் வீரமணியிடம் காட்டினார். அவர் உடனடியாக தகடூர் அதிய மான் வரலாற்று சங்கத்தின் தலைவர், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சுப்பிரமணியத் தைத் தொடர்பு கொண்டு கண்டுபி டிப்பு குறித்து கூறினார். பின்னர் தகடூர் அதியமான் வர லாற்று சங்கத்தின் தலைவர் சுப்பிரம ணியன், செயலாளர் மருத்துவர் செந்தில், வே ராஜன், ஆகியோர் ராசி குட்டைக்குச் சென்று அந்த மட்பாண்டங் களை ஆய்வு செய்தனர். இவற்றை ஆய்வு செய்த சுப்பிரமணியன் இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரிவித்தார். ராசிகுட்டை குன்றின் ஓரங்களில் தொல் பழங்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பங்கு நத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிக ளில் நடந்து வரும் அகழ்வாய்வுக ளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறி யப்பட்டிருக்கின்றன. இக் கண்டுபிடிப் புகள் தருமபுரி மாவட்டத்தில் பல்லாயி ரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர் கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டு கின்றன என்றனர்..