districts

img

பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு உற்சாகம்

நாமக்கல், ஜன.29- சேந்தமங்கலம் வட்டம், பொட்டி ரெட்டிபட்டியில் சனியன்று ஜல்லிக் கட்டு போட்டி வெகு உற்சாகமாக நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் வட்டம், பொட்டிரெட்டிபட்டியில் சனியன்று ஜல்லிக்கட்டு போட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் முன்னிலை யில், சுற்றுலாத்துறை அமைச்சர் மருத் துவர் மா.மதிவேந்தன் கொடிய சைத்து துவக்கி வைத்து, பார்வை யிட்டார். மேலும், ஜல்லிக்கட்டுப்  போட்டி நடைபெறும் மைதானத்தில்  வாடிவாசல் அமைப்பு, ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வரு வதற்கு தனியாக பாதை அமைப்பு,  காளைகளை ஆய்வு செய்ய கால் நடை பராமரிப்பு துறையினருக்கு தனி ஏற்பாடு மற்றும் மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு, அவசர சேவை ஊர்தி வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு போன்றவை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.    மேலும், மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடை வெளியில் மைதானத்திற்கு வந்து காளைகளை அடக்க, வெவ்வேறு வண்ணத்தில் சீருடைகள் அணிந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற் றதை பார்வையிட்டு உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப் பினர் பாலசுப்பரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை  இயக்குநர் பொன்னு வேல், நாமக்கல் கோட் டாட்சியர் த.மஞ்சுளா,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், சேந்தமங்கலம் வட்டாட் சியர் சுரேஷ் உட்பட வரு வாய்த்துறை, காவல் துறை, அரசு அலுவலர் கள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பா ளர்கள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.   முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந் தன் அவர்கள் தலைமையில், ஜல்லிக் கட்டு வீரர்கள் தமிழக அரசின் ஜல்லிக் கட்டு போட்டி தொடர்பான விதிமுறைக ளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறை களையும், முறையாக கடைபிடித்து அமைதியாக ஜல்லிக்கட்டை விளை யாடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொண்டனர்.