எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிப் பட்டறை
திருப்பூர், செப்.29- திருப்பூரில் மாணவ, மாணவியர்களுக்கு எலக்ட்ரா னிக்ஸ் பயிற்சி பட்டறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனியன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஒரு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத் திற்கான பயிற்சி பட்டறை சனியன்று தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை துணைத் தலைவர் கார்த்திக் தலைமையேற்று துவங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக திட்டப் பணியாளர் குழு சண்முகநா தன் வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து டேட்டா சயிண்டிஸ்ட் எஜுகேஸன் ஸ்கோப் அருண் பிரசாத் கலந்து கொண்டு மாணவர்களிடையே எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பல தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து, தமிழ்நாடு அறி வியல் இயக்க மாவட்ட கருத்தாளர் அஜித் குமார் மாண வர்களுக்கு செயல்பாடுகள் மூலம் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் கௌரி சங்கர் அவர்கள் நிறை வுறையாற்றினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.
கொள்ளை வழக்கில் கைதான சிறைக்காவலர் பணியிடை நீக்கம்
தருமபுரி, செப்.29- கொள்ளை முயற்சி வழக்கில் கைதான தருமபுரி சிறைக் காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், செல்லி யம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பேர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, பொது மக்கள் சுற்றிவளைத்து பிடித்ததில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கொள்ளை முயற்சி யில் ஈடுபட்ட நபர் தருமபுரி சிறையில் வார்டனாக பணி புரியும் சக்தி (30) என்பது தெரியவந்தது. விடுப்பில் சென்ற இவர், நண்பருடன் சேர்ந்து கொள்ளை முயற்சி யில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சக்தியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கைதான சிறைக்காவலர் சக்தியை பணியிடை நீக்கம் செய்து சேலம் சிறைத்துறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டுள்ளார்.
குட்டையில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
உதகை, செப்.29- உதகை அருகே குட்டையில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோசப் ராய். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகு தியை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணமானது. தற் போது இவருக்கு தன்வி வயது (3), மன்வி (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் ஜோசப் ராய் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்தனர். கடந்த ஒரு வருடமாக உதகை ஆளுநர் சோலை பகுதியில் தங்கி, கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள காளான் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜோசப் ராய் தனது மனைவியுடன் சனியன்று காளான் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு குழந்தைகளும் காளான் பண்ணைக்கு அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெற்றோர் கள் வேலையில் மும்முரமாக இருந்ததால் குழந்தை கள் அந்த வழியாக மெதுவாக நடந்து சென்று அருகில் உள்ள குட்டைக்கு சென்று விட்டனர். அப்போது மாலை 4 மணியளவில் மன்வி குட்டை தண்ணீரில் விழுந்து விட்டார். மன்வி தண்ணீரில் விழுந்ததால் அதைப் பார்த்து தன்வி அழுது கொண்டிருந்தார். குழந்தையின் அழு குரல் கேட்டதால் பெற்றோர் மற்றும் அங்கு பணி யாற்றியவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப் போது மன்வி தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோ தனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உதகை காவல் ஆய்வாளர் சிவசங்கரி தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
துணை முதல்வரானார் உதயநிதி! திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கோவை, செப்.29- துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலி னுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திமுக இளைஞரணி செயலாளர் உத யநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல் வராக ஞாயிறன்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்விற்கு திமுக நகரச் செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், விவசாயத் தொழிலாளர் அணி நிர்வாகிகள் அருண்குமார், சி.ஆர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்பின் அங்கு கூடி யிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேபோல், காந்திபுரத்தில் திமுக தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி னர். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், கோபி நகரப் பகுதியில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும் திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூர், செப். 29- திருப்பூரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கடந்த ஆண்டை விட கூடுதலான போனஸை 15 நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங் கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட் டம் பி.என்.சாலையில் உள்ள ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியுசி சங்கத்தின் பொதுச் செய லாளர் என்.சேகர் தலைமை வகித்தார். இதில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண் டைக் காட்டிலும் தொழிலாளர்களுக்கு கூடுத லாக போனஸ் வழங்க வேண்டும். பனியன் தொழிற்சாலைகளிலும், செக்சன்களிலும் வேலை செய்து வரும் டைம் ரேட், பீஸ் ரேட் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும் கடிதம் அளிக்க வேண் டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில், சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் நாக ராஜ், ஏஐடியுசி பனியன் சங்க செயலாளர் ஆர்.செந்தில்குமார், எல்பிஎப் தலைவர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தம்பதி கொலை வழக்கில் 5 பேர் கைது
தருமபுரி, செப்.29- தருமபுரியில் கத்தியால் குத்தி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், வெற்றிலைக்காரன்பள்ளம் பகுதி யில் புது சிப்காட் வளாகத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத் தில் தேனி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் (31), கன்னியாகுமரி மாவட் டத்தைச் சேர்ந்த அஸ்வின் (21), பெங்களூருவைச் சேர்ந்த சபரி (35), தருமபுரியைச் சேர்ந்த நந்தகுமார் (27), பிரவீன்குமார் (33) ஆகிய 5 பேரும் இக்கொலையில் ஈடுபட்டது தெரியவந் தது. மேலும், இணையதளம் வாயிலாக பல்வேறு தொழில் களை செய்து வந்த தேனியைச் சேர்ந்த தம்பதியைக் காரில் கடத்தி வந்து நகைகளைப் பறித்துக் கொண்டு கத்தியால் குத்தி கொலை செய்து இருவரின் உடலையும் தருமபுரி பகுதிக்கு எடுத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டு விட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரை யும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிப் பட்டறை
திருப்பூர், செப்.29- திருப்பூரில் மாணவ, மாணவியர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி பட்டறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனி யன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் வடக்கு கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஒரு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான பயிற்சி பட்டறை சனியன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை துணைத் தலைவர் கார்த்திக் தலைமையேற்று துவங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக திட்டப் பணியாளர் குழு சண்முகநாதன் வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து டேட்டா சயிண்டிஸ்ட் எஜுகேஸன் ஸ்கோப் அருண் பிரசாத் கலந்து கொண்டு மாணவர்களிடையே எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பல தகவல்க ளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இதைய டுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கருத்தாளர் அஜித் குமார் மாணவர்களுக்கு செயல்பாடுகள் மூலம் எலக்ட் ரிக்கல் சர்க்யூட் போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் கௌரி சங்கர் அவர்கள் நிறைவுறையாற்றினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.
தண்ணீர் திறக்க வலியுறுத்தி மறியல்
கோவை, செப்.29- பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்லடம் – உடுமலை சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர், கம்மாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல், பிஏபி வாய்க்காலில் வரும் தண் ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். முதற்கட்ட மாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், இரண்டாம் கட்ட தண்ணீர் திறக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து போயின. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவழித்த விவசாயி கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயி கள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் ஆவேசமடைந்த விவசாயிகள் செஞ்சேரிபுத்தூர் வழி யாக செல்லும் பல்லடம் - உடுமலை சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த சுல்தான்பேட்டை காவல் துறையினர் விவசாயி களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்பேரில் விவ சாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.