தருமபுரி, ஜூன் 26- பொதுமக்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய முன்னாள் அலுவலர்க ளுக்கு சிறை தண்டனை விதித்து, தருமபுரி குற்றவியல் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், நெருப்பூர் கிராமம், நாக மரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந் திரன். இவரது மனைவியின் தந்தை மாரிமுத்து என்பவர், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இயக்குநராக பணி புரிந்து கடந்த 2007 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இறந்த மாரிமுத்து வின் மனைவி முத்துலட்சுமிக்கு, அர சிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய, பென்னா கரம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் உதவியாளர் உதயகுமார் என்ப வரை, ராஜேந்திரன் சந்தித்துள்ளார். அப்போது, குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய கோப்பு தயார் செய்து சென்னைக்கு, அனுப்பி வைக்க உதவியாளர் உதயகுமார் ரூ.1000 லஞ்சம் கேட்டு, பின்னர் ராஜேந்திரன் கெஞ்சி கேட்டதால் ரூ.500 கொடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து ராஜேந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு, தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார ளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, உதயகுமாரை காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி குற்ற வியல் நீதிமன்றத்தில் 13 ஆண்டுக ளாக நடைபெற்று வந்தது. இந்நிலை யில், செவ்வாயன்று விசாரணை முடி வுற்று, உதயகுமாருக்கு, ஊழல் தடுப்பு சட்டம் – 1988இன்படி, சட்ட பிரிவு 13(2) r/w 13(1) (d)-ன் கீழ், ஒரு ஆண்டு சாதாரண தண்டனையுடன், ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் சிறை இதேபோன்று, மொரப்பூர், கல் லாவிரோடு மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த ரங்கன் என்பவரும், அவரது மகன் மாசிலாமணியும். மொரப்பூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பி னர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வள்ளிமதுரை வரட்டாறு நீர்தேக்கத்திட்டம் அணைப்பகுதி யில் மீன்பாசி குத்தகையை ஒரு வருட காலத்திற்கு எடுத்திருந்தனர். மீண் டும் 2008 - 09 முதல் 2012-13 வரை 5 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்து, ஆணை பெறும்பொருட்டு, அப்போது அச்சங்கத்தின் தனி அலு வலரான இளங்கோ என்பவரை கடந்த ரங்கன் சந்தித்துள்ளார். அப் போது, குத்தகைக்கான கால நீடிப்பு ஆணை பெற்றுத்தர ஏற்பாடு செய்ய ரூ.3 ஆயிரம் கையூட்டு கேட்டுள்ளார். இதுகுறித்து ரங்கன், கடந்த 2008 ஆம் ஆண்டு, நவ.4 தேதி தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவை கையும், களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை 13 ஆண்டுக ளாக தருமபுரி குற்றவியல் நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. இந்நி லையில், செவ்வாயன்று விசாரணை முடிவுற்று, இளங்கோவிற்கு ஊழல் தடுப்பு சட்டம் – 1988இன்படி, சட்ட பிரிவு 7இன்கீழ் ஒரு ஆண்டு சாதா ரண தண்டனையுடன், ரூ.1,000 அப ராதமும், பிரிவு 13(2) r/w 13(1) (d) இன் கீழ் ஒரு ஆண்டு சாதாரண தண்ட னையுடன், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.