districts

வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு சிறை

நாமக்கல், ஜூன் 24- கொல்லிமலையில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை, செம்மேடு அருகே உள்ள நத்துகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் (53). இவர்  கடந்த 2002 ஆம் ஆண்டு இந்திரா ஆவாஸ் யோஜனா இலவச வீடு  கட்டும் திட்டத்தில் வீடு கட்டினார். இதற்காக அரசு சார்பில் வழங்கப் படும் காசோலையை பெற அப்போ தைய குண்டூர்நாடு ஊராட்சி மன்ற பெண் தலைவரான பொன்னம்மாள் (60) என்பவரை அணுகினார். அங்கு  காசோலையை வழங்க பொன்னம் மாள், சின்னையனிடம் ரூ.2 ஆயிரம்  லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் கொடுக்க முடி யாது எனக்கூறிய சின்னையன். ரூ. 400 தருவதாக கூறி உள்ளார்.  இதுகுறித்து, சின்னையன் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் தெரிவித்தார். இதன்பின் போலீசார் கொடுத்த அறிவுரையின்படி, கடந்த 2002 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியன்று தாம் பபாடி பகுதியில் உள்ள ஊராட்சி  மன்ற அலுவலகத்தில் வைத்து லஞ்ச  பணம் ரூ.400யை சின்னையன், பொன்னம்மாளிடம் கொடுத்துள் ளார். அப்போது அங்கு மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்னம்மாளை கையும், களவு மாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்  வியாழனன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம் மாளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண் டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம்  விதித்து நீதிபதி சாந்தி உத்தர விட்டார். இதையடுத்து பொன்னம் மாளுக்கு நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதில் அவருக்கு உடல் நலக்குறைவு கண்டறியப்பட்டதால், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார்.