திருப்பூர், மார்ச் 6 - பல்வேறு அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருப்பூரில் மாபெ ரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஞாயிறன்று நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ராஜேந்திரன், தங்கப் பாண்டியன், பாலசுப்பிரமணியம், சந்தி ரசேகரன், ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் துவக்கி வைத்து பேசினார். உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர் கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள் மற் றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத்திட்டதை உட னடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண் பாடுகளை களைய வேண்டும். முடக்கப் பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதி யம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத் தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்து ணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், எம்ஆர்பி செவிலியர், வரு வாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை யில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரி யர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகி கள் உரையாற்றினர். மாலை 5 மணிக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றது.