இச்சிப்பட்டி ஊராட்சியை கண்டித்து காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு
திருப்பூர், ஆக. 27 - பல்லடம் ஒன்றியம் இச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து விவ சாயிகள், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட் டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கொடுத்த மனு மீது உரிய முறையில் தீர் மானம் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற் றியது தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதி இந்த தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் கூறி யுள்ளனர். பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டியில் சட்டத்தின் படி நடக்காமல் விதிகளை மீறி தலைவர், துணைத் தலைவர், உறுப்பி னர்கள் மக்கள் கேட்கும் அடிப்படையான வசதிகளை நிறைவேற்றி வழங்காமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றனர். விதிகளை மீறி நடந்து வருவது குறித்து கேள்வி எழுப்பினால் வசை பாடுவதும், தனிப் பட்ட முறையில் தொடர்பு கொண்டு இரவு முழுக்க தொல்லை கொடுத்து சச்சரவு ஏற் படுத்துவதும், நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை, நீங்கள் எல்லாம் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறுவதும், ஊராட்சி நிர்வாகி என்ற முறையில் அல்லாமல் தனிப்பட்ட முறையில் தரம் கெட்ட வகையில் பேசி வருவதும் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவும், ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நிறைவேற்றி வழங்கக்கூடிய தீர்மா னத்தின் படி எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் எந்தவொரு ஆதாரமும் இன்றி இனாம் பூமியை கோவில் பூமி என்று கூறி விவசாயிகளை கோவில் நில ஆக்கிர மிப்பாளர்கள் என்று தெரிவித்து, தவறான நோக்கத்தில் பொது தளத்தில் ஊராட்சி சார்பாக செய்தி வெளியிட்டு உள்ளனர். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இச்சிப்பட்டி ஊராட்சி நிர் வாகத்தை கண்டித்து தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள் ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர், எம்.பி.,க்கள் குறித்து அவதூறு
மேட்டுப்பாளையம், ஆக.27- மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற் றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி ஆகி யோர் குறித்து முகநூலில் அவதூறு தெரிவித்த, நகராட்சி நகர மைப்பு அலுவலரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அறிவுடை நம்பி (49). இவர் திருப்பூர், மேட்டுப்பாளையம், வால் பாறை, நீலகிரி பகுதிகளில் உள்ள நகராட்சி அலுவலகங்க ளில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். நீலகிரி மாவட்டம், தேவாலாவில் உள்ள நெல்லியாலம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றி வந்த அறிவுடை நம்பி, பணி ஒழுங்கீனம் காரணமாக கடந்த ஜன.5 ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் “விஜய் அறிவுடை நம்பி” என்ற பெயரில் முகநூல் பக்கத்ததை துவக்கி, அதில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கனி மொழி ஆகியோரை பற்றி அவதூறும் பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பா ளர் முகமது சபீக், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதேபோல், திமுக மேட்டுப்பாளையம் நகர வடக்கு துணைச்செயலாளர் மூர்த்தி என்பவரும் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். முகமது சபீக், மூர்த்தி ஆகியோர் தனித்தனியாக மேட்டுப் பாளையம் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அறிவுடை நம்பியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அறிவுடை நம்பியை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, 15 நாள் காவ லில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வனத்திலிருந்து வெளியேறும் விலங்குகள்
உதகை, ஆக.27- கேத்தி அருகே வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக காட்டுமாடுகள் வெளியேறி வரும் நிலையில், மனித - விலங்கு மோதல்களை தவிர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் உதகை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காட்டுமாடுகளை வேட்டையாடக்கூடிய விலங்குகள் இப்பகுதியில் குறைவு என வன உயிர் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் புலிகள் காட்டுமாடுகளை வேட்டையாடுகின்றன. ஆனால், குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள் குறைவாக உள்ளது. காடுகள் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு களால் காட்டுமாடுகள் செல்ல வழியின்றி குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வருகின்றன. இதனால் மனித - விலங்கு மோதல்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கேத்தி பகுதியில் அடர் வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டுமாடுகள் வெளியேறி வரு கின்றன. அவை தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. மனித - விலங்கு மோதல்களை தவிர்க்க வனத்துறையினர் அவற்றை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர். யானைகள் முகாம் இதேபோல கேரளா மாநிலத்திலிருந்து கூடலூர் அருகே உள்ள அத்திகுணா உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளுக்கு யானைகள் கூட்டம் தற்போது இடம்பெயர்ந்து வருகிறது. கூட லூர் அருகே உள்ள அத்திகுன்னா டவர் பகுதியில் குடியிருப்பு கள் உள்ளது. அப்பகுதியில் ஞாயிறன்று தேயிலைத்தோட்டத் தின் நடுவே ஆறு குட்டிகளுடன் கூடிய 14 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர் கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைகளை விரட் டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிப்காட் அமைக்க நூதன முறையில் எதிர்ப்பு
நாமக்கல், ஆக.27- மோகனூர் அருகே சிப்காட் அமைக்க அப்பகுதி விவசாயி கள் நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளை யப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பள வில் சிப்காட் அமைய உள்ளது. இதற்கான நிலம் கையகப் படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி உள் ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்க ளும், விவசாயமும் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் அமைப்பதை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு குழுவி னர், விவசாயிகள் நாமக்கல்லை அடுத்த வளையபட்டியில் உள்ள கஸ்தூரி மலையில் உள்ள ரங்கநாதர் கோவிலில் விளக்கேற்றி முழக்கங்களை எழுப்பினர்.
பெட்ரோல் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி
நாமக்கல், ஆக.27- நாமக்கல்லில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில், தேசிய பெட்ரோல் தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் கார்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணி 20 கிலோமீட்டர், 50 கிலோமீட்டர், 105 கிலோமீட்டர் என 3 பிரிவின் கீழ் நடைபெற்றது. இதில், சுமார் 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். நாமக்கல்லிலிருந்து புதன் சந்தை வரையிலும், ஆண்டலூர் கேட் வரையிலும், சேலம் மாவட் டம், அயோத்திபட்டிணம் வரையிலும் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகளும், பாராட்டு சான் றிதழ்களும் வழங்கப்பட்டன.
கோவையில் விழிப்புணர்வு மாரத்தான்
கோவையில் விழிப்புணர்வு மாரத்தான் கோவை, ஆக.27. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும், பெண்களுக்கு சம உரிமை மற் றும் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக கோவை, நீலாம்பூர் பகுதியில் ப்ரீடம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வி வொண் டர் வுமன் அமைப்பு மற்றும் கற்பகம் அகடாமி இணைந்து நடத்திய இப்போட்டியை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். டெக்லத்தான் வளாகத்தில் துவங்கி, அவிநாசி சாலை வழியே 5 கிலோ மீட்டர் சென்று மீண்டும் டெக்லத்தான் வளாகத்தில் முடிவ டைந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் சிறுவர், சிறுமிகள் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஓடினர். மேலும், இந்த மாரத்தான் நிகழ்ச்சி மூலமாக திரட்டப்படும் நிதி ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப் படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
நாமக்கல், ஆக.27- குமாரபாளையம் அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை, தேசிய நெடுங் சாலை பகுதியில் உள்ள முக்கிய பகுதியா கும். இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் நூற்பாலைகள் இயங்கி வருகின் றன. இப்பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த வேலைக்காக சேலம் மற்றும் ஈரோடு சென்று வருகின்றனர். ஈரோடு பேருந்து நிலையத்தி லிருந்து மற்றும் சேலம் பேருந்து நிலையத்தி லிருந்து ஏறினால், வெப்படை பேருந்து நிறுத் தத்தில் பேருந்து நிற்காது எனக்கூறி பயணி களை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணி கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். ஆனால், அந்த தனியார் பேருந்துகள் வெப்படை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளை சேலம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையங்களுக்கு ஏற்றி செல்கின்றனர். பய ணிகள் இருந்தால் மட்டும் நிற்கும் இந்த தனி யார் பேருந்துகள், சேலம் மற்றும் ஈரோடு பகுதியில் ஏறும் பயணிகளை ஏற்றிக்கொள்ள மறுப்பதால் தாங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டிலிருந்து சேலம் சென்ற தனியார் பேருந்தை அப்பகுதி பொது மக்கள் வெப்படையில் சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வெப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, இனி பேருந்துகள் நிறுத்திச் செல்ல ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில், போராட்டக்காரர்கள் பேருந்தை விடு வித்தனர்.
சிறுத்தை தாக்கி வாலிபர் பலி? மக்கள் அச்சம்
கோவை, ஆக.27- தடாகம் அருகே உள்ள மேல்முடி ரங்க நாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் உயிரி ழந்த நிலையில், அவர் சிறுத்தை தாக்கி உயிரி ழந்திருக்காலம் என கூறப்படுகிறது. கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேல்முடி ரங்க நாதர் கோவில் உள்ளது. இது ஒரு மலைக் கோவில் ஆகும். இங்கு மலைப்பாதை வழி யாக மட்டுமே ஏறி செல்ல இயலும். சாலை வசதியோ, படிக்கட்டுகளோ இல்லை. வழக்க மாக விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோவி லுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர். இந்நிலையில், சனியன்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியா ளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சடலத்தில் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந் துள்ளது. இதனையடுத்து தடாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில் உயிரிழந்த நபர் பேரூர், செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுக சூர்யா (24) என்பது தெரியவந்தது. இதனைய டுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற் கொள்கையில், சுகசூரியா கோவில்களுக் குச் சென்றால் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து தான் வருவார் என்றும் தெரிவித் துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆக.15 ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில், தற்போது சடலமாக கண்டெடுக் கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் ஏலம்
நாமக்கல், ஆக.27- நாமக்கல், திருச்செங் கோடு வேளாண்மை உற்பத் தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் தலைமை யகத்தில் மஞ்சள் ஏலம் நடை பெற்றது. இதில் விரலி மஞ் சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 222 முதல் ரூ.16 ஆயிரத்து 859 வரை யிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயி ரத்து 503 முதல் ரூ.13 ஆயி ரத்து 812 வரையிலும் விலை போனது. மொத்தம் 800 மஞ் சள் மூட்டைகள் ரூ.60 லட்சத் திற்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.