பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் ரூ.8 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் ஏழைகள் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச்செயலாளர் கு.ராம கிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.