districts

img

இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்: ஈஸ்வரன் உறுதி

தருமபுரி, ஏப்.16- அதிக இடங்களில் வெற்றி பெற்று  இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ் வரன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணியை  ஆதரித்து, கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி சார்பில் அரூரில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்முருகன் தலைமை  வகித்தார். இதில் கட்சியின் பொதுச்செ யலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசு கையில், மக்களவைத் தேர்தலில் இந் தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இந் தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நிறுவனங்களில் பெண்களுக்கு 50  சதவிகித வேலைவாய்ப்பு, ஏழை குடும் பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, எரி பொருட்களின் விலை குறைப்பு, கல் விக்கடன் ரத்து ஆகிய திட்டங்கள் நிறை வேற்றப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் இல வச மின்சாரம் வழங்கப்பட்டது. அவரது  ஆட்சியில் விவசாயிகள் முன்னேற்றம்  அடைய பயிர்கடன்கள் தள்ளுபடி செய் யப்பட்டன. எனவே, தருமபுரி மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் இந் தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஆ.மணியை அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண் டும், என்றார். இக்கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் பி.பழனியப்பன், கொம தேக மாவட்டச் செயலாளர் கே.பி.இளங்கோ, மாவட்டத் தலைவர் அரு ணாச்சலம், ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடாசலம், பார்த்தீபன், ஒன்றியத் தலைவர்கள் இளையராஜா, ரவி,  வெங்கடாசலம், திமுக அவைத்தலை வர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.