districts

img

குன்னூரில் தென்பட்ட இருவாச்சி பறவைகள்

உதகை, ஜன.17- அரியவகை பறவையான இரு வாச்சி பறவைகள் குன்னூர் மலைப் பாதையில் தென்படுவது சுற்றுலா பயணிகள் மற்றும் பறவைகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக 65 சதவிகித வனப்பகுதி கொண்டுள்ள நீல கிரியில் ஏராளமான பறவைகள் காணப்படுகிறது. குறிப்பாக வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங் களை சேர்ந்த பல்வேறு விதமான பறவைகள் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதில், நீலகிரி பறவைகளான பிளாக் ட்ராங்கோ, சன் பேர்ட், கிங் பிஷர், பர்புல் பின்ச் உட்பட பறவை கள் மட்டுமல்லாமல் வெளிநாடு களை சேர்ந்த ஒயிட் சீக்ட் பார்பிட், பிளாக் கார்மெரன்ட் போன்ற ஏரா ளமான பறவைகள் சுற்றி திரிகின் றன. இதேபோன்று இருவாச்சி பற வைகள் தற்போது குன்னூர் - மேட் டுப்பாளையம் மலைப்பாதையில் வருகை புரிந்துள்ளது. இந்த பற வையானது கேரள மாநிலம் மற்றும் அருணாச்சலம் பிரதேசம் மாநில பறவையாக இடம் பெற்றுள்ளது. இதன் மூக்கு மிக நீளமாகவும், உடல் கருப்பு வெள்ளை நிறத்தி லும், தலை பகுதி மஞ்சள் இளஞ் சிவப்பு வண்ணத்திலும் இருக் கும். இது பறக்கும் போது ஹெலி கப்டர் பறப்பது போல சத்தம் எழுப் பும் தன்மையுடையது. குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் பகுதி களில் சுற்றித்திரியும் இந்த பறவை கள், மேட்டுப்பாளையம் சாலை யில் நஞ்சப்பசத்திரம், கேஎன்ஆர்  போன்ற பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தென்படுகின் றன. மனிதர்களை நெருங்காத இந்த பறவைகள் தற்போது நகர் பகுதிக்கு வருவதால் சுற்றுலா பய ணிகள் மற்றும் பறவை ஆர்வலர் களின் மத்தியில் பெரும் ஆச்சரி யத்தை ஏற்படுத்தியுள்ளது.