districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், ஜூன் 20- சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீர, தீர மற்றும் சாக சச் செயல்கள் புரிந்த தகுதி  வாய்ந்த பெண்கள் 2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ் லா விருதிற்கு விண்ணப்பிக் கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு 2022 ஆம் ஆண்டிற்கான தைரியமாக சமுதாய தொண்டு செய்து, சாதனை புரிந்த பெண்மணி ஒருவ ருக்கு சுதந்திர தினத்தன்று  கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்காக வீர,  தீர மற்றும் சாகசச் செயல் கள் புரிந்த தகுதிவாய்ந்த பெண்மணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. சாதனை புரிந்த விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பம் மற்றும் ஆவணம் அடங்கிய விரிவான தொகுப்புகளை 24.06.2022 மாலை 5.00 மணிக் குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக் கப்பட வேண்டும் என நாமக் கல் மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு தேர்ச்சி பிளஸ் டூ : 96.57 %, பத்தாம் வகுப்பு : 88.46 %

திருப்பூர், ஜுன் 20 - திருப்பூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 10ஆம் வகுப்பில் 88.46  பேரும் தேர்ச்சியடைந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில்  பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு கிடந் தன. இதன் பிறகு கொரோனா தொற்று குறையத் தொடங்கிய  பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.  இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள்  திங்களன்று வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  358 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 804 மாணவர்கள், 14  ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து  631 பேர் எழுதினர். இதில் 12 ஆயிரத்து 459 மாணவர்க ளும், 13 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 26  ஆயிரத்து 212 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 84.16 சத வீதம், மாணவிகள் 92.76 என மொத்தம் மாவட்டம் முழுவதும்  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.46 சதவீதம் பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இதுபோல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம்  முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாண வர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24  ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர் களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயி ரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 95.18 சதவீத மும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம்  முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம்  பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களை ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர். 10-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அள வில் 30-வது இடமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7-வது  இடமும் பிடித்துள்ளது.

மனை வரை முறைப்படுத்தல் முகாம் ஒத்திவைப்பு

அவிநாசி, ஜூன் 20- அவிநாசியில் தனிமனை வரைமுறை படுதல் முகாம் ஊராட்சிகளில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது தேர்தல்  காரணமாக ஒத்திவைக்கபட்டுள்ளது. அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராமப்புற ஊராட்சிகள் உள் ளன. இதில் பல ஊராட்சிகளில் மனை (டிடிசிபி அப்ரூவல்)  அங்கீகாரம் இல்லாமல் பலர் தவித்து வந்தனர். இந்நிலை யில் அவினாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் மனை  அங்கீகரிக்க ஊராட்சிகளை மண்டல வாரியாக பிரிக்கப் பட்டு தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடத்துவது  என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஊராட்சி களில் மக்கள் பிரதிநிதிகளின்றி காலியாக உள்ள இடங்க ளுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தமிழக  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து மனை அங்கீகார முகம் ஒத்திவைக்கப்பட்டது என அறிவிக்க பட்டுள்ளது.

இன்று மின்தடை

திருப்பூர் ஜூன் 20-  பூமலூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிக ளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளதால் செவ்வாயன்று (இன்று) காலை 9 மணிமுதல்  மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட வுள்ளதாக செயற்பொறியாளர் சென்ராம் தெரிவித்துள் ளார்.

நாளை மின் தடை பகுதிகள்:

 மங்கலம், பூமலூர், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளை யம், கிடாத்துரை புதூர் ஆகிய பகுதிகள் ஆகும்.

ரு.1.76 கோடிக்கு பருத்தி ஏலம்

 தாராபுரம், ஜூன் 21- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரு. 1.76  கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், முலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, முலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 708 விவசாயி கள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். இதை  தொடந்து அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரு.11 ஆயிரத்து 890ம் குறைந்தபட்ச விலையாக ரு. 8ஆயி ரத்து 690 ம் சராசரி விலையாக ரு.10ஆயிரத்து 650க்கும் விலை போனது. மொத்தம் 5252 முட்டைகள் ஆயிரத்து 717  குவிண்டால் பருத்தி ரு. 1 கோடியே 76 லட்சத்து 68 ஆயி ரத்து 436க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 21 வணி கர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்கா ணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

100கிராம் தங்க கட்டி வாங்கியவர் கைது

அவிநாசி, ஜூன் 20- அவிநாசி அருகே தனியார் நிறுவனத்தின் காசோலை யில் போலியாகக் கையெழுத்திட்டு,  100 கிராம் தங்கக்கட்டி  வாங்கிய நபர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். செம்பிய நல்லூர் ஊராட்சி கந்தம்பாளையத்தை சேர்ந்த வர் சீனிவாசன்(47) இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நகைக்கடையில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகி றார். இந்நிலையில் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கை  ஆய்வு செய்த போது, எச்.டி.எப்.சி. வங்கி காசோலையைப் பயன்படுத்தி ரூ. 5லட்சத்து, 46 ஆயிரத்து 100 ரூபாய் வங்கிக்  கணக்கில் பற்று வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது இதுகு றித்து எச்.டி.எப்.சி. வங்கி மேலாளரைக் கேட்ட போது  கோவையில் உள்ள மலபார் கோல்டு என்ற  நகைக்கடையில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மலபார் நிறுவன சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில்,  அதே தனியார் நகைக்கடையில் பணிபுரிந்த ராஜ் என்பவர்  அங்குச் சென்று தங்கக் கட்டியை விலைக்கு வாங்கியது தெரி யவந்தது. விசாரணையில், தனியார் நகைக்கடையில் பணி யிலிருந்து நின்ற ராஜ், அந்நிறுவனத்தின் ஒரு காசோலையை  மட்டும் எடுத்துச் சென்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் கையெழுத்தை போலியாகயிட்டு, ரூ. 5லட்சத்து, 46 ஆயி ரத்து 100க்கு 24 காரட் 100 கிராம் தங்கக் கட்டி வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, ராஜ் (32) என்பவரை ஞாயிறன்று  கைது செய்தனர்.

ஒகேனக்கல்லில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகள்

தருமபுரி, ஜூன் 20- ஒகேனக்கல்லில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடையை மீறி ஆற்றில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தனர். கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தருமபுரி மாவட் டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந் தும் காணப்படுகிறது. மேலும், கர்நாடக மாநிலம், பெங்க ளூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சனியன்று தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக் கவும் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்ப தால் ஒகேனக்கல்லில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பய ணிகள் கூட்டம் இருந்தது. மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இன்று ஆபத்தை உணராமல் சுற்றுலா பய ணிகள் அருவியில் குளித்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க  மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

உதகை, ஜூன் 20- வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் டி.அடை யான் குட்டன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. உதகை அருகே உள்ள கவர்னர் சோலை பார்சன்ஸ் வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2021 ஆண்டு முதல்  புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் புலிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க கோரி மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், மீண்டும் இப் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  மேலும், இப்பகுதிகளில் கரடிகள் நடமாட்டமும் அதிக ரித்துள்ளது, தோட்ட வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளிகள் மத்தில் பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.  இந்த வனவிலங்குகள் பயிர்கள் அறுவடை செய்யும் நேரங்க ளில், தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடு கின்றன. எனவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு, விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் - பொதுமக்கள் புகார்

தருமபுரி, ஜூன் 20- இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பொது மக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற்றிட அரசு அலுவலகங்களை விட இ-சேவை மையங் களை அணுகி பதிவு செய்து, சான்றிதழ்கள் பெற்று வரு கின்றனர். பிறப்பு, இறப்பு, வருமானம், இருப்பிடம், விதவை, முதியோர் உதவி தொகை, பட்டா மாற்றம், பெயர் மாற்றம், சேர்தல், நீக்கள், உள்ளிட்டவைகள் பெற்றிட பணம் கொடுத் தாலும் அலைச்சல் இல்லாமல் வேலை ஆகிறதே என  இ-சேவை மையத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலை யில், தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் இ-சேவை மையங் களில் ஒவ்வொறு சான்றிதழ் பதிவு செய்ய குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்துள்ள நிலையில், நிர்ணயம் செய்த தொகையை விட மூன்று, நான்கு மடங்கு அதிக தொகை வசூல் செய்வதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், விபரம் அறியாத ஏழை, எளிய மக்களி டம் அவர்களின் அறியாமையை அறிந்து பதிவு செய்த  போது சரியாக பதிவு செய்யவில்லை. நீங்கள் உரிய சான்றி தழ்கள் கொண்டு பதிவிடவில்லை என பல இ-சேவை மையங் கள் அவர்களிடம் மீண்டும் மீண்டும் பணம் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள் பலவற்றில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

உதகை: யானை தாக்கி ஒருவர் பலி

உதகை, ஜூன் 20- முதுமலை அருகே யானை தாக்கிய தில் பழங்குடியினர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா  புதுக்காட்டை  சேர்ந்தவர் பசுவராஜ் (45). முன் னாள் வேட்டை தடுப்பு காவலரான இவர், ஆனைகட்டி கிராமத்தில் தங்கி கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தவர். இந்நிலை யில், உறவினர்களை பார்க்க பொக்காபுரம் பகுதிக்கு சென்ற போது மூங்கில் புதரில் இருந்த யானை பசுவராஜை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிங்காரா வனக்காவ லர் ஜான் பீட்டர், வனவர் மசனன் ஆகியோர் பசுவராஜின் உடலை மீட்டு, பிரோத பரிசோத னைக்காக உதகை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவ ரது மகளிடம் தமிழக அரசின் நிவாரண தொகையை வனத்துறையினர் வழங்கி னர். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இருக்கும் பொதுமக்கள், இரவு  நேரத்தில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர்.