districts

img

குப்பையில்லா நகராக மாற்றுவதே லட்சியம்

உடுமலை, மார்ச் 15-  குப்பையில்லா நகரமாக உடு மலை நகரை மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தெரிவித்துள்ளார்.  உடுமலை நகரமன்ற அலுவலகத் தில் செவ்வாயன்று வளர்ச்சி திட்டங் கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் திருமண மண்ட பம், உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் சேரும் குப்பைகளை முறையாக மறு சுழற்சி செய்யும் வகை யிலும், உடனடியாக குப்பைகளை அப் புறப்படுத்தும் வகையிலும் அதன் உரி மையாளர்களுடன் கலந்தாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், பொள்ளாச்சி-பழனி சாலை, தளி சாலை, திருப்பூர் சாலை, ராஜேந் திரா சாலை, தாராபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத் திற்கு இடையூறாக ஏராளமான ஆக்கிர மிப்புகள் இருந்து வருவதால், வாகன  ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, உடுமலை நகரில் போக்கு வரத்தை சீர் செய்யவும், ஆக்கிரமிப் புகளை அகற்றவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார். இதில் நகர மைப்பு அலுவலர் கோவிந்தராஜ், போக்குவரத்து காவல் துறை ஆய்வா ளர் வெங்கடேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நகர்மன்றத்  தலைவர் மு.மத்தீன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், குப்பையில்லா நக ராக உடுமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கபடும். பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுபான கடை கள் அகற்றப்படும். மேலும், போக்குவ ரத்து நெரிசலை சீர் செய்யும் வகை யில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்து தரப் படும். குறிப்பாக தளி சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக் கிரமிப்புகளும் சமரசம் இன்றி அகற்றப் படும் என தெரிவித்தார்.   முன்னதாக செவ்வாயன்று வாரச் சந்தை, பாதாளச் சாக்கடை பணிகள்,  கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப்  பாதை பணிகள், பழனி ஆண்டவர் நகர்  ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் ஆகி யவற்றை நகர்மன்றத் தலைவர் மு.மத் தீன் ஆய்வு செய்தார். அப்போது, நக ராட்சி ஆணையாளர் சத்யநாதன் மற் றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலு வலர்கள் உடனிருந்தனர்.