கோவை, அக்.20- கல்லூரி, வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் கொடுக்க முடியாது என யாரும் மறுக்க முடியாது என்பதை சட்டம் கூறுகிறது என உச்சநீதிமன்ற நீதி பதி கே.வி.விஸ்வநாதன் தெரிவித் துள்ளார். கோவையில் செயல்பட்டு வரும் ‘சுவர்கா’ என்ற மாற்றுத்திறனாளிக ளுக்கான தன்னார்வ அமைப்பின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா கோவையில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில், உச்சநீதிமன்ற நீதி பதி கே.வி.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திற னாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய 2025 ஆம் ஆண்டிற்கான நாள் காட்டியை நீதி பதிவிஸ்வநாதன் வெளியிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் நீதி பதி கே.வி.விஸ்வநாதன் பேசுகை யில், நான் பிறந்த கோவை மண் ணில் மாற்றுத்திறனாளி அறக்கட் டளை மூலம் செய்து வரும் பணிகள் எனக்கு கண் திறப்பாக அமை கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி என்ற முறையில், இந்தியாவில் நீதித்துறை என்பது இயலாதவர்க ளுக்கு பல உரிமைகள் சட்டத்தின் மூலமும், தீர்ப்பின் மூலமும் வழங் கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நமது கருணையை எதிர்பார்க்க வில்லை. சட்டத்தில் கொடுக்கப் பட்ட உரிமையை மாற்றுத்திறனாளி கள் அடைய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள், நிர்ணயிக்க வேண் டும் என்பதைத்தான் எதிர்பார்க்கின் றனர். அரசு மற்றும் நீதித்துறை அந்த செயல்களை செவ்வனே செய்து வருகிறது. ஒருவருக்கு எவ்வளவு மாற்றுத் திறன் உள்ளது என்பதை வைத்து, ஒரு கல்லூரியில் அனுமதிக்க மாட் டோம் எனக்கூற முடியாது. மருத்து வக்கல்லூரியில் கூட அனுமதிக்க மாட்டோம் என சொல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கு அந்த இய லாமை இருந்தால்கூட, அவரால் அதனை படிக்க முடியும் என்று நிபு ணர்கள் கூறினால், அந்த கல்லூரி யில் அனுமதி கொடுத்தாக வேண் டும். இது தான் சட்டம். வேலை வாய்ப் பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை உள்ளது என்பதை 2016 இல் கொண்டு வந்த சட்டம் அதை உறுதி படுத்தியுள்ளது, என்றார். முன்னதாக மேடையில் பேசிய நீதிபதி கே.வி.விஸ்வநாதன், மாற் றுத்திறனாளிகள் பல்வேறு திறமை களை கொண்டுள்ளனர். 45 சதவிகி தம் வரை மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நீட் போன்ற தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்று மருத்துவத்துறையில் கால் பதித்துள்ளனர், என குறிப்பிட்டார்.