உடுமலை, மார்ச் 3- உடுமலை நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு, மகளிருக்கான போட்டிகள் நடை பெற்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நீதிமன்றத் தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோலம் போடும் நிகழ்ச்சி மற்றும் மகளிருக் கான வெளியரங்க விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. கோலத்திற்கான தலைப்பாக “ஆண்கள் பாது காப்பு” என்ற தலைப்பின் கீழ் அனைத்து பெண் வழக்க றிஞர்களும், நீதிமன்ற பணியாளர்களும், வழக்கறி ஞர்களின் உதவியாளர்களும் கலந்து கொண்டனர். கோலங்களை உடுமலைப்பேட்டை சார்பு நீதிபதிகள் பார்வையிட்டு மதிப்பெண் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் டி.ஆர். மனோகரன், செயலாளர் கே.எம்.ராஜேந்திரன், துணைத் தலைவர் சி.சிவராமன், பொருளாளர் பிரபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.