சேலம், அக்.12- சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நல்லாயன் கன்னியர் இல்ல சகோதரிகள் மற்றும் பணியா ளர்கள் இணைந்து உடையாபட்டி ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அயோத்தியபட்டணம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அயோத்தியபட்டிணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜே. இளங்கோ தலைமை தாங்கினார். நல்லாயன் கன்னியர் இல்ல திட்ட இயக்குனர் அருட் சகோதரி அருணா ஜார்ஜ், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் லாவண்யா கிரேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான இலவச தொலைபேசி எண்கள் மற்றும் மொபைல் செயலிகள் அடங்கிய ‘சுவ ரொட்டியை’ வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலை வர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நல்லாயன் கன்னியர் இல்லம் திட்ட இயக்குனர் இணைந்து வெளி யிட்டனர். அதைத்தொடர்ந்து அனைத்து நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் இணைந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக “வேண்டாம் வேண்டாம் குழந்தை திருமணம் வேண்டாம்” என்ற முழக்கத்துடன் பொம்மலாட்டம் வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.