கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்
கோவை, ஜூன் 17- கூடலூர், காரமடை, கருமத்தம் பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நகராட்சி பகுதிகளில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத் தின் கீழ் 94 பள்ளிகளை சேர்ந்த 3,853 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்காக ரூ.226கோடி மதிப் பில் 8 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது என ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார். கோவை, காரமடை மற்றும் கூட லூர் நகராட்சி பகுதிகளில் முதல மைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி நேரில் பார் வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி இயக் குநர்(பேரூராட்சிகள்) துவாரக நாத் சிங், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி, செயல் அலு வலர் நந்தகுமார் மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து, ஆட்சியர் அலுவ லக செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, பள்ளிக் குழந்தை களின் உடல்நலம் மற்றும் கல்வியை உறுதி செய்வதில் தமிழக அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ் நாடு முதலமைச்சர் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத் தார்.
இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 121 பள்ளிகளில் பயிலும் 15,216 மாணவர் களும், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் 11 பள்ளிகளில் 1503 மாணவர்களும், மதுக்கரை நகராட்சி பகுதிகளில் 4 பள்ளிகளில் 952 மாண வர்கள் என மொத்தம் 136 பள்ளி களில் 17,671 மாணவர்கள் முதல மைச்சர்களின் காலை உணவுத் திட் டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒருங் கிணைந்த சமையல் கூடம் கட்டப் பட்டு வருகின்றது. அதன்படி, கூட லூர் நகராட்சியில், 10 பள்ளிகளுக்கு தெக்குப்பாளையம்,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ20 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல்கூடமும், காரமடை நக ராட்சியில், 7 பள்ளிகளுக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல் கூடமும், கருமத்தம்பட்டி நகராட்சி யில், 6 பள்ளிகளுக்கு நகராட்சி திரு மண மண்டபத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமை யல்கூடமும், பொள்ளாச்சி நகராட்சி யில், 12 பள்ளிகளுக்கு கோட்டூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.27லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சமையல்கூடமும், வால்பாறை நகராட்சியில், 59 பள்ளி களுக்கு நீர்வீழ்ச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, வால்பாறை அரசு மேல் நிலைப்பள்ளி, உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சோலை யார் அணை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில் தலா ரூ.36 லட்சம் மதிப்பில், ஒருங்கிணைந்த சமையல்கூடங்களும் என மொத்தம் 94 பள்ளிகளை சேர்ந்த 3.853 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்குவதற்காக ரூ.226கோடி மதிப்பில் 8 ஒருங்கிணைந்த சமை யல் கூடங்கள் கட்டும் பணிகள் நடை பெற்று வருகின்றன என்றார். முன்னதாக, காரமடை நகராட்சி யில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், கூட லூர் நகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப் பிலும் கட்டப்பட்டுள்ள ஒருங் கிணைந்த சமையலறை கூடங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.