கோவை, மே 17- 2023 ஆம் ஆண்டு ஒருங்கி ணைந்த யானைகள் கணக்கெடுக் கும் பணி தமிழ்நாடு, கேரளம், கர்நா டகா, ஆந்திரா போன்ற நான்கு மாநி லங்களில் புதனன்று துவங்கியது. கோவை மாவட்டத்தில் யானை கணக்கெடுக்கும் பணி ஏழு வனச்சர கங்களான மதுக்கரை, கோவை, போளுவாம்ட்டி, மேட்டுப்பாளை யம், சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம் மற்றும் காரமடை போன்ற பகுதிகளில் 42 பிளாக்குகளாக கண் டறியப்பட்டுள்ளது. யானைகள் கணக் கெடுக்கும் பணியில் வனச்சரகர்கள் வனக்காப்பாளர்கள் வன அலுவலர் கள் வன ஆர்வலர்கள் மற்றும் தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒவ் வொரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் ஏழு நபர்கள் வரை இணைக்கப்பட்டுள்ளனர். யானை கள் கணக்கெடுக்கும் கையேடு ஒவ் வொரு குழுக்களுக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. 7 வனச்சரங்கள் கோவை மாவட்ட வனப்பகுதியில் 84 வனச் சரகர்கள்,
88 வன ஆர்வலர்கள் மற் றும் வனத்தொண்டு நிறுவன ஆர்வ லர்கள் புதனன்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவை, பெரியநாயக்கன்பாளை யம் வனச்சரக பகுதிகளில் வன அதி காரி செல்வராஜ் தலைமையில் ஏழு குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனச்சரகர் வேட்டை தடுப்பு காவலர் இரண்டு வன ஆர்வ லர்கள் என நான்கு நபர்கள் தெற்கு வனச்சராகப் பகுதி, குருதி மலைப் பகுதியில் புதனன்று காலை யானை கள் கணக்கெடுக்கும் பணியை துவங் கினர். தற்போது வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்தும், யானைகள் எந்தெந்த பகுதிகளில் தங்களுடைய வாழ்விடத்தை அமைத் துக் கொண்டுள்ளது என்பது குறித் தும், யானைகள் செல்லக்கூடிய பாதை களில் யானை சாணிகள் யானை நீர் குடிக்கக்கூடிய நீர் நிலைகள் என அனைத்து பகுதிகளும் கணக்கெடுக் கப்படுகின்றன. தமிழக வனப்பகுதி யிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வரக்கூடிய யானைகள் குறித்த துல்லியமாக கணக்கெடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் வனத்துறை காவ லர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து நடைபெறக்கூடிய இந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில் அனைத்து வன அதிகாரி கள் வன ஆர்வலர்கள், வனச்சரகர் கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.