கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகளிர் துணைக்குழு சார்பில் சுமைப்பணி தொழி லாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில், எல்ஐசி மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜி.சுதா, எம்.சாரதா மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை கோட்ட இணைச்செயலாளர் பி.விகுமார் மற்றும் என்.ராமநாதன், ஆர்.முரளி சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எம்.ஏ.பாபு, ஆர்.ராஜன், எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.