districts

img

தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்களை அவமதிப்பு அமித்ஷா காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, மே 30- பாலியல் தொல்லை அளித்த பாஜக நாடா ளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல் யுத்த வீரர், வீராங்கனைகளை அடாவடித்தன மாக கைது செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறையை கண்டித்து கோவையில் வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்து வருபவர் பிரிஜ் பூஷன். பாஜக நாடா ளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வரும்  இவர், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித் ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ் சாட்டி, தலைநகர் தில்லியில் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களும் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றன. பெரும் போராட்டத்தின் விளைவாக பிரிஜ் பூஷன் மீது போக்சோ  உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், தற்போது வரை அவரை கைது  உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்நிலையில், பாலியல் குற்ற வாளியான பாஜக எம்பி., பிரிஜ் பூஷனை  புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங் கேற்க வைத்த சம்பவம், ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே முகச்சுழிப்பை ஏற் படுத்தியது. இதனையடுத்து இந்திய மல்யுத்த வீரர் கள், கடந்த ஞாயிறன்று புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக  செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக் காரர்களை ஒடுக்கும் விதமாக ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட் டில் உள்ள காவல் துறை களமிறங்கியது. அப் போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள்  உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையானது அடாவடித்தனமான முறை யில், மூர்க்கத்தனமாக கையாண்டு குண்டுக் கட்டாக  தூக்கி சென்று கைது செய்தது.

 மேலும், கைது செய்யப்பட்டவர்களின்  புகைப்படங்களை பாஜகவைச் சேர்ந்த வர்கள் மார்பிங் செய்து, காவல்துறை வாக னத்தில் சிரித்து கொண்டு இருப்பது  போல போலி படங்களை பரப்பியது. தற்போது மல்யுத்த வீரர், வீராங்கனை கள் தாங்கள் போராடி பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவு செய்துள்ளனர். இந் நிலையில், நியாயம் கேட்டு அமைதியான முறையில் போராடி வரும் மல்யுத்த வீரர்க ளுக்கு ஆதரவாகவும், பாலியல் தொல்லை அளித்த பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும். போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வரும் அமித்ஷாவின் கட் டுப்பாட்டிலுள்ள காவல் துறையை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட  செயலாளர் சுதா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் அர்ஜூன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில் மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாமன்ற உறுப்பினர் சுமதி, காரமடை நக ராட்சி கவுன்சிலர் பிரியா உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். முடிவில், மாதர்  சங்க மாவட்ட பொருளாளர் ஜே.உஷா நன்றி கூறினார்.