districts

img

தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய ரயில்வே காவல் ஆய்வாளர்

சேலம், நவ.1- கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய சேலம் மார்க்கெட் சிஜிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ரயில்வே கூட் செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய சேலம் மார்க்கெட் சிஜிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். சேலம் மார்க்கெட் சுமைப்பணி தொழி லாளர்களை “துப்பாக்கியால் சுட்டுத் தள்ளு வேன்” என மிரட்டிய சேலம் மார்க்கெட் ரயில்வே காவல் ஆய்வாளர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐ டியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மார்க்கெட் கூட்செட் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தின் சம்மேளன தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வா கிகள் பி.சக்திவேல், டி.மதியழகன், கே. கோவிந்தராஜ், சங்கர் சுப்பிரமணி, சேலம் ஜில்லா சுமைதூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பிரபு, கே.எம்.மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.