districts

img

அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப். 2 - நாமக்கல் மாவட்டம், வேலகவுண் டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் உள் கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நமக்கு  நாமே திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.  இதனையடுத்து, வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளா கத்தில் உள்ள அங்கன்வாடி சமையல்  கூடத்தில் வழங்கப்படும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்தார். அட்டவ ணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதா எனவும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்ட றிந்தார்.  பின்னர்,  வேலகவுண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக  சென்று கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும்  பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள்  குறித்தும் கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் அ.தமிழரசி, செ.புஷ்பராஜன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.