districts

img

இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

சேலம், செப்.6- நீட், க்யூட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட், க்யூட் போன்ற தேர்வுகளை ஒன்றிய அரசு கொண்டு வந்துள் ளது. இதனால் மாணவர்கள் எதிர்காலம் கேள் விக்குறியாகும் சூழல் உருவாகி உள்ளது.  இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதி யாக சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கீர்த்திவாசன், டார் வின் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்டனர்.