திருப்பூர், ஜூலை 28 – தமிழ்நாடு முழுவதும் செயல்படாத குவாரிகளைச் சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும் என்ற தமிழக தலைமைச் செய லாளரின் உத்தரவை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வெள்ளியன்று சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு முழுவதும் கைவிடப்பட்ட குவாரி குழிகள் மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இயங்கி முடித்து, கம்பிவேலி அமைக் காத கல்குவாரி குழிகளில், ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மனிதர் களும் குறிப்பாக சிறுவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ளதில் விலங்குகள் மூழ்கி இறக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் அரசின் பதிவுகள் கணக்குப் படி 35 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த கணக்கில் வராமல் பலர் இறந்துள்ளனர். தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும், கல் குவாரியை சுற்றி முழுமையாக, கம்பிவேலி போட்டு அடைத்த பின்னரே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையும், வட்டக் கண்கா ணிப்புக் குழு அனுமதியும், உதவி இயக்குநர் (கனிமம்) நடைச்சீட்டும் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. எனினும் பல குவாரிகளில் கம்பி வேலி அமைக்கப்படாமல் உள்ளது. இதில் மிகப்பெரும் லஞ்ச, ஊழல் நடைபெற்றுள்ளது. பெரும்பாலான மாவட் டங்களில் இந்த நிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் உத்தரவை வர வேற்கின்றோம். இதை உடனே செயல்படுத்த வேண்டும் என்று சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் கேட்டுக் கொண் டுள்ளனர்.