உடுமலை, ஜன.11- நிலசீர்திருத்த சட்டத்தில் வழங்கப்பட்ட 105 ஏக்கர் நிலத்தில் தனிநபர் ஒருவர் 22 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை மீட்டுத்தர உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவ சாயிகள் வலியுறுத்தினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் புதனன்று கோட்டாட் சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் உடுமலை வட்டாட்சியர், வருவாய்த்து றையினர், வேளாண்துறை, பொதுப்பணித் துறை, உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசா யிகள் பேசியதாவது:-
மதுசூதனன்: விவசாய குறை தீர்க்கும் கூட் டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு, தீர்வு கிடைப்பதில்லை. பல மாதங்களாக விவசாயி களின் குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்ப டும் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக் குப் பதிலே இல்லை. விவசாயிகளுக்குப் பய னுள்ள கூட்டமாக அமைய வேண்டும். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்துறையும், தோட்டக்கலைத்துறை யும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலசீர்திருத்த சட்டத்தில் குடிமங்கலம் ஒன்றியம் ஆத்துகிணத்துப்பட் டியில் வழங்கப்பட்ட 105 ஏக்கர் நிலத்தில் தனி நபர் ஒருவர் 22 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதனை ஆய்வு செய்து மீட்டு, ஏழை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உரக்கடைகளில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். விருகல்பட்டியில் ஏழை விவசாயி வனவி லங்கால் தாக்கப்பட்டதிற்கு இதுவரை இழப் பீடு வழங்கப்படவில்லை.
வனத்துறை சார் பில் விவசாயிக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடுமலை கால்நடை மருத்துவமனையில் இருந்த கட் டிடத்தை எந்த அனுமதியும் இல்லாமல் இடித்து அங்கிருந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசா ரணை செய்து சம்பந்தப்பட்டவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். தாந்தோணி, துங் காவி, ராமேகவுண்டன்புதூர் பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டு மண் கொள்ளை நடந்து வருகிறது. இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. விளைநி லங்களில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும், அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மண் எடுக்க வேண்டும், பயிர் வாரியாக கணக் கெடுப்பு நடத்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக செல்லுவதில்லை. அதனை வரு வாய்க் கோட்டாட்சியர் முறைப்படுத்த வேண் டும், பெரிய வாளவாடி பெருமாள் கோவிலுக் குச் சொந்தமான நிலம் தரிசாக உள்ளது. அதனை பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜம்புக்கல் மலை ஆக்கி ரமிப்பு குறித்துக் கடந்த இரண்டு ஆண்டுகளா கப் பிரச்சினை உள்ளது. இதுவரை பலமுறை மனு அளித்தும் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை இல்லை உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
கோபால்: தேசிய நெடுஞ்சாலைப் பணிக் காக 50 மேற்பட்ட கனரக வாகனங்களில் இரவு, பகலாக பல லோடுகள் மண் எடுக்கப் பட்டு வருகிறது. அதிவேகமாக இயக்கப் படும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டது வரு கிறது. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு உயி ரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள் ளார்கள். இங்கு வாகனங்களில் காப்பீடு, ஆர்சி என பல்வேறு சோதனைகளைச் செய்து வரும் இங்குள்ள காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் எவ் வித தணிக்கையும் செய்வதில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை பணியில் மண் எடுத்து வரும் வெளிமாநில கனரக வாகனங்களை துறை அதிகாரிகள் தணிக்கை செய்து, மண் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மண் எடுத்து வரும் கனரக வாகனங்களில் 50 டன் அள்ளப்பட்டுக் கொண்டுவருவதால் , சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளன. மேலும் தாலுகா அள வில் 54 துறைகள் உள்ளன. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் முழு மையாகக் கலந்து கொள்வதில்லை. அனைத்து பிரிவு அதிகாரிகளும் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்குத் தீர்வு காண வேண்டும், ஜல்லிபட்டி அரசு பள்ளி அருகே உள்ள பள்ளி மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு வருகிறது. இதுகுறித்து உடனடி ஆய்வு செய்து அரசு நிலத்தை மீட்க வேண்டும் என் றார்.
உடுக்கம்பாளையம் பரமசிவம்: சங்கராம நல்லூர் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தி வரும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். வடபூதனம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி விவசாயிகள் அந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்த முடிவதில்லை. அங்கு தேங்கும் தண்ணீரை அகற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுக்கம்பா ளையம் கிராமத்திற்கு கொரோனா காலத் தில் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரா பெரியசாமி: குடிமங்கலம் ஒன்றியத் தில் 20 மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணைகள் கட்டு வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறு கிறது. விவசாயிகளுக்கு இந்த தடுப்பணை கள் பயன்படுகிறதா, ஒதுக்கப்பட்ட நிதி முழு வதும் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதா என் பதை ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 30 முறை மனு கொடுத் துள்ளேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. மேலும் குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி கிராமத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடி மங்கலம் ஒன்றியத்தில் பல முறைகேடு உள் ளது. மனுக் கொடுத்தால் ஒன்றிய அதிகா ரிகள் பதில் வழங்குவதில்லை.
ஶ்ரீதர்: குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவு கிராமத்தில் தனிநபர் ஒருவர் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிட பணி கள் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து சென்ற கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோட்டாட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும். அரசு சிமென்ட் வேண்டும் என கேட்டு கடந்த 2020ல் பணம் செலுத்தியும் இதுவரை சிமெண்ட் வழங்கவில்லை. இதற்கு ஒன்றிய அதிகாரிகள் உரிய பதில் வழங்க வேண்டும் என்றார். ராஜகோபால்: வனத்துறை சார்பில் விவ சாயிகளுக்கு நடத்தப்படும் கூட்டம் குறித்து அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் கூட்டம் நடப்பதற்கு முன்பாக போதிய அவகாசத்தில் முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும், பொன்னாலம்மன் சோலை பகுதியில் விவ சாய தோட்டத்துச் சாலையில் வளர்க்கப் பட்டு வந்த 7 ஆடுகளை செந்நாய் கடித்து இறந் துவிட்டநிலையில், பாதிக்கப்பட்ட விவசா யிக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்ப டவில்லை. கடந்த இரண்டு வருடமாகியும் வழங்கப்படாத நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். சுந்தர்ராஜன்: குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடிமின்பகிர்மானம், வசவநாயக்கன் பட்டியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கிறது. இதுகுறித்து, மின் குறைதீர்க் கும் கூட்டத்திலும் மேற்பார்வை பொறியாள ரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிம நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.