districts

img

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.20- குண்டும், குழியுமாக உள்ள  அன்னசாகரம் - பாரதிபுரம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்டது அன்னசாகரம். இப்பகுதி யில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்குள்ளவர்கள் தருமபுரி நகருக்கு சென்று வர  இரண்டு வழியை பயண்படுத்துகின்றனர். அதில் ஒன்று  அன்னசாகரத்தில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையா கும். இந்த சாலை மண்சாலையாக இருந்தது. தார்சாலை யாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த தன் அடிப்படையில், சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை  அமைக்கப்பட்டது. ஆனால், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தார்ச்சாலை அமைக்காமல் மண்சாலையாகவே உள் ளது. இதனால், குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை கடக்க இருச்சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் குண்டும், குழியுமாக  உள்ள இச்சாலையை சீரமைத்து முழுவதும் தார்ச்சாலை யாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.