உடுமலை, பிப்.6- சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் வேலை செய்யும் அனைத்து பணியா ளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தின் முன்பாக திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும். இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சத் துணவு திட்டத்தில் உணவுகள் செய்ய சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டுத் துணைத் தலைவர் எல்லம்மாள், ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் பாலகிருஷ்ணன், உடுமலை வட்டக் கிளை செயலாளர் விஜயகுமார், அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளை செயலாளர் வெங்கிடுபதி, சத்து ணவு ஊழியர் சங்கத்தின் தங்கவேல், உட்பட திரளானோர் கலந்து கொண்டார் கள்.