districts

img

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வலியுறுத்தல்

சேலம், பிப்.2- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி, அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் எடப்பாடி கோட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஓமலூரில் கோட்டத் தலைவர் மு.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் கலைவாணன் அந் தோணி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநிலச் செய லாளர் சு.செந்தில்நாதன் நிறைவுரையாற்றினார். இக்கூட்டத் தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு பணி நிய மனம் வழங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், கோட்டப் பொருளாளர் க.மாரியப்பன் நன்றி கூறினார்.