திருப்பூர், அக்.27- வேலம்பாளையம் பகுதியில் தரை மட்டத்தை விட உயர்த்தி கட்டப் பட்ட வடிகால் காரணமாக மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பிரச்சனையில் அதிகா ரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. வேலம்பாளையம் - கணியாம் பூண்டி சாலையின் இரு இடங்களில் அண்மையில், மாநில நெடுஞ்சா லைத் துறையின் சார்பில் கழிவுநீர் வடி கால் செல்லும் வகையில் சாலை மட் டத்தை விட இரண்டடி உயர்த்தி தரைப் பாலம் கட்டப்பட்டது. உரிய இடத்தை மாற்றிக் கட்டுவதாகவும், திட்டமிட்ட இடத்தில் கட்ட வேண்டும் என அப்ப குதி மக்கள் கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன்பாகவே ஒப்பந்த தாரரிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால், பாலம் கட்டி பணிகள் முடிந்த நிலையில், ரேசன் கடையை ஒட் டிய வீதியில் உள்ள வீடுகள் தாழ்ந்தும், கழிவுநீர் வடிகால் உயர்ந்தும் உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு பெய்த கன மழையில், 15. வேலம்பாளையம், கரிய காளியம்மன் வீதி ரேசன் கடை அருகில் உள்ள 15 வீடுகளுக்குள் மழைநீரும், சாக்க டைக் கழிவுநீரும் வெள்ளமெனப் பாய்ந்தது. இத னால், உணவுப் பொருட்களும், இதர பொருட்களும் பாழா கியுள்ளன. இதே போல், வீடுகள் முழுவதும் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், ரேசன் கடை சுவரில் கீழான பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் இணைப்புப் பெட்டியும் நீரில் நனைந்து,
அசம்பாவிதம் நிகழும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சினை முத லாம் மண்டல உதவி ஆணையர் கவ னத்திற்கும் கொண்டு செல்லப்பட் டது. அவரும், இடத்தைப் பார்வை யிட்டுச் சென்றுள்ளார். அதே சமயம் உடனடியாக மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நேரில் சென்று பார்த்து, பகுதி மக்கள் மேலும் பாதிக்காமல் இருக்கும் வகை யில் உரிய தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ள னர். புதன்கிழமையன்று காலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம் பாளையம் பி கிளைச் செயலாளர் வி.ஆர்.சரவணகுமார், முன்னாள் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணி யம் ஆகியோர் தலைமையில் அப் பகுதி மக்கள், மண்டல அலுவலகத் தில், கண்காணிப்பாளர் ராஜசேக ரிடம் மனு அளித்தனர். அப்போது, சிபிஎம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.குணசுந்தரி, பி.ரகுபதி, வேலம் பாளையம் ஏ கிளைச் செயலாளர் எம். வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.