districts

img

சேதமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, அக்.25- தருமபுரி அருகே சேதமான  நிலையிலுள்ள தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி வட்டம், எட்டி மரத்துப்பட்டியிலிருந்து வத்தல் மலை அடிவாரம் வரை 6  கிலோ மீட்டர் துாரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இவ் வழியாக அங்கணாம்புதுார், எட்டியானுார், ஏமகுட்டியூார், தின்னஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள் ளன. இச்சாலை வழியாக பேருந்து, கார், இரு சக்கர வாகனங்கள் நாள்தோறும் சென்று  வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியின் பல்வேறு இடங்களில் தரைப்பாலம் அமைக் கும் பணி நடந்து வருகிறது. மேலும், இச் சாலையின் பல இடங்கள் குண்டும், குழியு மாக உள்ளது. இதனால், சாலையில் செல் லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற் போது தொடர்ந்து பெய்து வந்த மழையால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே, சேதமான நிலையி லுள்ள இந்த தார்ச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டி கள் வலியுறுத்தியுள்ளனர்.