districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் மனு

பள்ளிபாளையம், மே 26- சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து  கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பள்ளிபாளை யம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவல கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் 17 ஆவது வார்டு கிளைகள் சார் பில், கிளைச் செயலாளர் பெருமாள் தலைமையில் அளித் துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, 17 ஆவது வார்டுக் குட்பட்ட பகுதியில் உள்ள சாக்கடை குறுகலாக இருப்பதால், மழை பெய்யும் நாட்களில், குடியிருப்புகளுக்குள் சாக்கடை  நீர் நுழைந்து சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதைய சூழ் நிலைக்கு ஏற்ப சாக்கடையை அகலப்படுத்தி, மழை நீர் மற்றும் சாக்கடை நீர் விரைவாக செல்லும் வகையில் அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுவை பெற்றுக் கொண்ட நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ்  ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.