districts

img

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க வலியுறுத்தல்

சேலம், ஜன.1- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மழை வெள்ள  பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் உள் ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளி  வைக்க வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்திடியுள்ளார். சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட  பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட அக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ் வரன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், சென்னை, செங்கல்பட்டு உள் ளிட்ட மாவட்டங்கள் புயல் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது வரை மீளவில்லை. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க வேண் டும். பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, அதுகுறித்தான அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பானை சேர்க்கப்பட்டால் வரவேற் போம். ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவா ரண நிதி வழங்க வேண்டும் என தமிழ் நாடு அரசு கேட்டது. ஆனால், நிதி தரா மல் அரசியல் பேசுகிறார்கள். தில்லி யில் இருந்து வந்த குழுவினர் உண் மையை தெரிவித்த பின்பும், அரசியல் பேசுகிறார்கள், என்றார். மேலும், சேலம் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டம் என்பதால், சேலத்தை  மூன்று மாவட்டங்களாக பிரிக்க வேண் டும். மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. சிறிய சிறிய சிக்கல்கள் தீர்த்து  வைக்கப்படும். இத்திட்டத்தை முடக்க முடியாது. சீலநாயக்கன்பட்டி, கொண்ட லாம்பட்டி ஆகிய இடங்களில் கடும் போக் குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனை  சரி செய்ய வேண்டும், என்றார்.