ஈரோடு, ஏப்.21- பவானி சாகர் அணையில் மீன் பிடி உரிமையை தனியாருக்கு விட் டதை ரத்து செய்து கூட்டுறவு மீனவர் சங்கத்தினருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உள்நாட்டு நீர்நிலை மீன்பிடி உரிமையை பொது ஏலம் விடும் நடைமுறையைக் கைவிட வலியு றுத்தி பவானிசாகர் மண்டல கோரிக்கை மாநாடு பவானிசாகரில் வெள்ளியன்று நடைபெற்றது. எல்.சேகர் தலைமை வகித்தார். சுப்பிரமணி வரவேற்றார். உள் நாட்டு மீன்பிடி மற்றும் மீன்விற் பனை தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அந்தோணி சிறப்புரையாற்றினார். அனைத்து வகை ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் ப.மாரிமுத்து மற்றும் ஆர். முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், உள்நாட்டு நீர்நிலை களில் மீன்பிடி உரிமையை பொது ஏலம் விடும் நடைமுறையைக் கைவிட வேண்டும். அரசாணைப் படி கூட்டுறவு சங்கத்தினருக்கு மீன் பிடி உரிமையை வழங்க வேண் டும். கோவை, உக்கடம் பகுதியில் உள்ள குளத்தில் டீசல் படகு விடப் பட்டுள்ளது. இதனால், மீன்வளம் பாதிக்கும், எனவே கை அல்லது மிதி படகு எனப்படும் பைபர் படகுகள் விட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. முன்னதாக மாநாட்டில், 27 கூட்டுறவு சொசைட்டிகள் கொண்ட பவானிசாகர் மண்டலத்திற்கு 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய் யப்பட்டது. அதன் தலைவராக சுப் பிரமணி, பொது செயலாளராக எல். சேகர், பொருளாளராக ஆர்.விஸ்வ நாதன், 5 துணைத்தலைவர்கள், 5 துணைச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.