districts

img

ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம், ஜன.4- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக் கெடுக்கும் பணி வெள்ளியன்று மாலை துவங்கியது. கோவை மாவட்டத்தில் மேட் டுப்பாளையம், காரமடை, சிறு முகை, பெரியநாயக்கன்பாளை யம், மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட ஏழு வனச்சரகங்கள் உள் ளன. இந்த ஏழு வனச்சரகங்களில் வெள்ளியன்று மாலை புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கி யது. இந்த கணக்கெடுப்புப் பணிகள்  எட்டு நாட்கள் நடைபெற உள்ளன.  கணக்கெடுக்கும் பணியில் வனத் துறையினர் மற்றும் வனவிலங்கு  ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  கணக்கெடுப்பின் முடிவில் சேகரிக் கப்படும் மாதிரிகளை கணக்கில்  கொண்டுபுலிகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள முடியும்.  ஒரு பிரிவிற்கு ஒரு வனவர், ஒரு வனக் காப்பாளர், ஒரு வனக்காவலர் மற் றும் வனவிலங்கு ஆர்வலர்கள் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதில் முதல் மூன்று  நாட்கள் யானைகளின் கால் தடங் கள், எச்சம் உள்ளிட்டவை கணக் கெடுக்கப்பட உள்ளன. காலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையாக நடந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டம், அதன் கால் தடங்கள், எச்சம், தாவர வகைகள் உள்ளிட்டவை சேகரிக் கப்படும். அடுத்ததாக 5 கி.மீ.  தொலைவிற்கு சென்று வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து ஆராயப்படும். நான்காம் நாள் முதல் எட்டாம் நால்வரை நேர் கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், குளம், குட்டைகள் கண்காணிக்கப்பட உள்ளன. இந்த நீர் நிலைகளில் மறைவாக அமர்ந்து  தாகம் தீர்க்க வரும் வனவிலங்கு களை நேரடியாக கண்டு அதில் தாவர  உண்ணிகள், ஊன் உண்ணிகள் என  தனித்தனியாக கணக்கெடுக்கப்பட உள்ளது. நேரடியாக களத்தில் தென் படும் மான்கள், யானைகள், காட் டெருமைகள், சிறுத்தைகள், புலி கள் உள்ளிட்டவை கணக்கெடுக் கப்பட உள்ளன. கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு தோராயமாக ஒரு வனச்சரகத்திற்கு இத்தனை புலி கள் இருக்கலாம்? என கணக்கெ டுக்கப்பட உள்ளது.