districts

img

உதகை 124வது மலர் கண்காட்சிக்கு நாற்று நடும் பணி துவக்கம்

உதகை, ஜன.4- உதகை அரசு தாவரவியல் பூங்கா வில் மே மாதம் நடைபெற உள்ள 124 ஆவது மலர் கண்காட்சியையொட்டி, நாற்றுகள் நடும் பணியினை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில்‌ மே மாதம்‌ 124  ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பூங்காவின்‌ பல்வேறு பகுதிகளில்‌ பல வண்ண மலர்‌ செடிகளைக்‌ கொண்டு மலர்‌ பாத்திகளை அமைக்க விரிவான ஏற் பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனி யம், பென்ஸ்டிமன்‌ மற்றும்‌ டிஜிட்டா லிஸ்‌ போன்ற மலர்‌ நாற்றுகள்‌ நடும்‌ பணியினை தமிழக வனத்துறை அமைச்சர்‌ கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் ஆகியோர் செவ்வாயன்று துவக்கி வைத்தனர்.  நடப்பாண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுலா பய ணிகளை கவரும்‌ வகையில்‌ 275  வகையான மலர் விதைகள்‌ ஜப்பான்‌, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடு களில் இருந்து பெறப்பட்டு, 5.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடவு செய்யப்படும்‌ மலர்‌ நாற்றுகளுக்கு பனியின்‌ தாக்கம்‌ ஏற்படாத வண்ணம்‌ கோத்தகிரி மிலார்‌ செடிகளைக்‌ கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்‌. இவ்வாண்டு எதிர்வரும்‌ மலர்‌ கண் காட்சியினை முன்னிட்டு மலர்காட்சி மாடம்‌ மற்றும்‌ கண்ணாடி மாளிகை யில்‌ 35 ஆயிரம் வண்ண மலர்‌த்தொட்டி கள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள்‌ செய் யப்பட்டு வருவதாக தோட்டக்கலை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.