districts

img

தொழிற்துறையினர் மனித சங்கிலி போராட்டம்

கோவை, டிச. 27- சிறுதொழில் நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான மின் கட்டண  உயர்வை முழுமையாக திரும்ப பெற  வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் ஒன் றிணைந்து மனித சங்கிலி போராட்டத் தில் ஈடுபட்டனர். பீக் ஹவர் கட்டணத்தை முழுமை யாக திரும்ப பெற வேண்டும். சொந்த  தொழிற்கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமை யாக திரும்ப பெற வேண்டும். வாழ் வாதாரத்தை பறிக்கும் நிலைக்கட் டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும்.  2 ஆண்டுக்கு கட்டண உயர்வு கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சிறுதொழில் முனை வோர், தொழிலாளர்கள் என பலர் பதா கைகள் ஏந்தி கோரிக்கை முழக்க மிட்டனர்.