ஈரோடு, அக்.15- சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளது. விசைத்தறி பெரும் வேலை வாய்ப் பினை அளித்து வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் தொழில், வணிகம் மிகவும் பாதிப்படைந்திருந்தது. தற் போது தொழில் மீண்டு வருகிற நிலை யில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு வெளி மாநில கொள்முதலுக்கு 1 சதம் செஸ் வரி போன்ற அறிவிப்புகளால் தொழில், வணிக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளது. மாநகராட்சியில் பல கட்டடங்கள் பழமையானவை. 10 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு ஏற்க னவே சதுர அடி கணக்கிட்டு வரி விதிக் கப்பட்டுள்ளது. அவற்றிற்கு விலக்கு அளிக்க வேண்டும். குப்பை வரி தான் சொத்து வரியாக விதிக்கப்பட்டது. ஆனால் குப்பைக்கு தனியாக வரி விதிக்கப்படுகிறது. சொத்து வரி 100 சதம் விதிக்கப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. குடிநீர் வரி, நூலக வரி என பல வரிகள் விதிக்கப் படுகையில் சொத்து வரி 20 முதல் 25 சதம் வரை மட்டுமே விதிக்கப்பட வேண்டும்.
மின் கட்டணம் பீக் அவர் மின் கட்டணம் என்பது தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சூரிய ஒளி மின்சாரம் பகலில் கிடைப்பதால், பகலில் பீக் அவர் கட்டணம் தேவை யற்றது. இரவு 10 மணிக்கு மேல் மின் உற்பத்தி மீதம் ஆவதால் 25 சதம் கட்டண சலுகை வழங்க வேண்டும். உணவு உற்பத்தி சார்ந்த பருவ கால வணிகம் மற்றும் தொழில்கள் உள்ளன. சீசனுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் நிரந்தர கட்டணம் என்பது ஆலைகளை நட்டத்திற்கு இட்டுச் செல்லும். ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் விசைத்தறி பெரும் வேலைவாய்ப்பினை அளிக் கிறது. மகாராஷ்டிராவில் மின் கட்டணம் ரூ.4. இதனால் அங்கு விசைத்தறி தொழில் செல்லும் அபாயம் உள்ளது. எனவே மின் கட்டண உயர்வுகளில் மறு சீராய்வு அவசியம் தேவை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் வி.கே.ராஜ மாணிக்கம் தலைமை வகித்தார். பொது செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொரு ளாளர் ஆர்.முருகானந்தம், ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் பி.திருமூர்த்தி, பொது செயலாளர் ஆர். ராம்பிரகாஷ், பொருளாளர் எஸ்.பழனி வேல், வரி செலுத்துவோர் சங்க தலைவர் டி.ஏ.சண்முகசுந்தரம், பொது செயலாளர் என்.பாரதி, பொருளாளர் சந்திரசேகர் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்களும், உறுப்பினர் களும் கலந்து கொண்டனர்.