அவிநாசி, பிப்.11– திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டு விளக்க வாகன பிரச்சார இயக்கம் அவிநாசியில் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டத் தொழில், தொழிலா ளர் நலனைப் பாதுகாப்பதற்கான கொள்கை களை மேற் கொள்ள வேண்டும் என வலியு றுத்தி வரும் 14ஆம் தேதி திருப்பூர் அரிசிக் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநாடு நடத்துகிறது. இம்மாநாட்டை பற்றிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு சார்பில் வட்டாட்சியர் அலுவலகம்,கேகே பேக்கரி, முத்து செட்டிபாளையம், பழையபே ருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் ஆகிய ஐந்து இடங்களில் பிரச்சார இயக் கம் நடத்தப்பட்டது. இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் மாநில தலைவர் முத்துசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச் சாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன் றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி, பாலசுப்பிர மணியம்,விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் சண்முகம்,கிளைச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.