districts

img

விலங்கு பூட்டி அனுப்பப்பட்ட இந்தியர்கள்: சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப்.9- சட்டவிரோதமாக குடியேறியவர் கள் என கை, கால்களில் விலங்கு பூட்டி இந்தியர்களை அனுப்பி வைத்த அமெரிக்க ஏகாதிபத்தி யத்தைக் கண்டித்து, சிஐடியுவினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, கடந்த வாரம் அமெ ரிக்காவில் சட்டவிரோதமாக குடியே றியதாக இந்தியர்கள் 104 பேர்களில் பெண்கள், குழந்தைகள் தவிர மற்ற வர்களின் கை, கால்களில் விலங்கிட் டபடி அமெரிக்க ராணுவ விமானம்  மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக் கும் வகையில், திருப்பூர் வெள்ளியங் காடு நால்ரோடு பகுதியில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார் பில், ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை வகித்தார். அப்போது, இந்தியர்க ளின் கை, கால்களில் விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனிதாபமற்ற அணுகுமுறையை காண்பிக்கிறது. அமெரிக்க அரசின் இச்செயலை சிறிய நாடுகள் கூட எதிர்த்து நிற்கி றது. ஆனால், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய அரசு எதிர்க்க இய லாமல் அழுத்ததில் உள்ளது. ஒன்றிய அரசின் பிரதமர் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும், என வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத்தலைவர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், செல்லதுரை , சாலை யோர வியாபாரிகள் சங்க செயலா ளர் பி.பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.