districts

img

யுஜிசியின் அறிக்கையை தீயிலிட்டு இந்திய மாணவர் சங்கம் முழக்கம்

சேலம், ஜன.9- துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரமளிக்கும் யுஜி சியின் அறிக்கையின் நகலை எரித்து  இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரைவு அறிக்கையை அண் மையில் வெளியிட்டது. இது மாநில  உரிமையை பறிப்பதாகும். இதன்மூ லம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினைச்  சார்ந்த நபர்களை பல்கலைக்கழகங் களில் புகுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு  முழுவதும் கண்டங்கள் எழுந்துள் ளன. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கின்ற யுஜிசியின் அறிக்கையை  திரும்பப்பெற வலியுறுத்தி, வியாழ னன்று மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக, சேலம் பெரியார் பல் கலைக்கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன் தலைமை வகித்தார். மாநிலத் தலை வர் தெள.சம்சீர் அகமது கண்டன உரையாற்றினார். இதில் சங்கத்தின் மாவட்ட துணை நிர்வாகிகள் கோகுல், டார்வின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வம், அகிலாண் டேஸ்வரி, நவீன் உட்பட ஏராளமான மாணவர்கள், யுஜிசி அறிக்கையின் நகலை தீயிலிட்டு முழக்கங்களை எழுப்பினர். கோவை இதேபோன்று கோவை பாரதி யார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. அகமது ஜூல்ஃபிகர் தலைமையில், மாவட்டக் குழு உறுப் பினர்கள் பாவேல், ரங்கசாமி, ஜெக தீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  காவல் துறையினர் எதிர்ப்பை மீறி  நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.