நாமக்கல், அக்.26- மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்திட வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தினர் வியாழ னன்று ராசிபுரம் திருவள்ளு வர் அரசுக் கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், பொது நிர்வாகம் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்ற சு.லோகேஷ் என்ற மாணவன் கடந்த 20ஆம் தேதியன்று வீட்டில் இருந்து தனியார் பேருந்து மூலம் கல்லூரிக்கு வரும் போது, படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். போதிய பேருந்து வசதியில்லாததால், குறைந்த எண்ணிக்கையில் உள்ள பேருந்து களில் அடைத்துக்கொண்டு பயணம் செய்வ தால் இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் இருக்கும் பகுதி களுக்கு அதிகளவிலான பேருந்துகளை இயக்க வேண்டும் என தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு மாணவர் உயிரிழந்த நிலையில், போக்கு வரத்து கழகத்தின் அக்கறையின்மையால் இவ்விபத்து ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளுவர் அரசுக் கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில், திரளான மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். மாணவர் விபத்து காப்புறுதித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என முழக் கங்கள் எழுப்பினர்.