கோவை, ஆக. 13- கோவை பாரதியார் பல்கலை கழகம் உள்ளிட்ட நான்கு பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தரை நியமித்திட வேண்டும், என்று வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தி னர் செவ்வாயன்று கோவை பாரதி யார் பல்கலைகழகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள் ளது. இதனால் பல்கலைக்கழகத் தின் அன்றாட பணிகள் பாதிக் கப்பட்டுள்ளது. மாணவர்களால் சான்றிதழ், ஆராய்ச்சி மாணவர்க ளால் பட்டயச் சான்றிதழ் உள்ளிட் டவை பெற முடியாத சூழல் உள் ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெக நாதனின் பதவிக்காலம் முடிந்தும் பதவியில் நீடித்து வருகிறார். உட னடியாக தமிழக அரசு தலையிட்டு ஊழல் வழக்கில் கைதான துணை வேந்தரை பதவியில் இருந்து அகற்றி புதிய துணைவேந்தரை நிய மிக்க உடனடியாக தமிழக அரசும் உயர் கல்வித்துறையும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசின் மாநில பல் கலைக்கழகங்கள் கடந்த 10 ஆண்டு களில் கடும் நிதி சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. யுஜிசி பல் கலைக்கழங்களுக்கு நிதி ஒதுக்கு வதை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், மாநில அர சின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதி யினை வெட்டியிருக்கிறது. தமிழ் நாடு அரசிடமிருந்து 50 சதவீகிதத் திற்கும் குறைவான நிதி பெற்றால் அது தனியார் பல்கலைக்கழக வரைமுறைக்குள் வருகிறது. மாநில அரசின் உயர்கல்வித்துறை யும் தன் பங்குக்கு நிதி தணிக்கை மற்றும் பல காரணங்களை சொல்லி பல்கலைக்கழங்களுக்கு வழங்கும் நிதியினை நிறுத்தியுள் ளது. இதனால், பல்கலைக்கழங் கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இந்த நிதி சிக்கலை காரணம் காட்டி பல்கலைக்கழக நிர்வாகங் கள் கட்டண உயர்வின் மூலம் மாண வர்கள் மீது சுமையை ஏற்றி வரு கின்றன. தேர்வு கட்டணம், சேர்க்கை கட்டணம், விடுதி கட்ட ணம் மற்றும் ஆராய்ச்சி மாணவர் களுக்கான கட்டணங்களை பன்ம டங்கு உயர்த்தி இருக்கின்றன. சேலம் பெரியார் பல்கலைக் கழக நிர்வாகம் ஊழல் முறை கேட்டை சரி செய்வதற்கு பதிலாக தேர்வு கட்டண உயர்வு என்ற பெய ரில் மாணவர்கள் மீது சுமையை ஏற்றி உள்ளது. இதனை இந்திய மாணவர் சங்கம் கண்டிப்பதோடு உடனடியாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக. 13 ஆம் தேதியன்று மாநிலம் முழுவ தும் உள்ள அனைத்து பலகலைகழ கம் முன்பு போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் சார்பில் அறைகூவல் விடப்பட்டிருந்தது. இதன்படி, செவ்வாயன்று (ஆக்.13) கோவை பாரதியார் பல் கலைகழகம் முன்பு இந்திய மாண வர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு, மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பிர வீன் குமார், மாநிலக் குழு உறுப்பி னர் கல்கி ராஜ் ஆகியோர் உரை யாற்றினர். மாநிலக் குழு உறுப்பி னர் நவீன் உள்ளிட்ட திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட நிர்வாகி கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், மாநிலக்குழு உறுப்பினர் ரஞ்சித் நன்றி கூறினார்.